சென்னை:
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்திய தொழிற்சங்கமையம் (சிஐடியு) இரங்கல் தெரி வித்துள்ளன.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவசாயி அம்மாள் (வயது 93) உடல்நலக்குறைவின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என அறிந்து மிகவும் வருந்துகிறேன். அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.அன்புத் தாயாரை இழந்து வாடும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கும் அவரது குடும்பத்தாருக்கும் உறவினர்களுக்கும் அனுதாபத்தையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
சிஐடியு மாநில தலைவரும், முன்னாள்சட்டமன்ற உறுப்பினருமான அ.சவுந்தரராசன்விடுத்துள்ள இரங்கல் செய்தி வருமாறு:தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிஅவர்களின் தாயார் தவசாயி அம்மாள்அவர்கள் காலமானார். அம்மையாரை இழந்து துயரத்தில் உள்ள முதலமைச்சருக்குநேரில் ஆறுதல் கூற முடியாத சூழ்நிலையைகொரோனா நோய் தொற்று ஏற்படுத்தி யுள்ளது. அன்னையை இழந்து வாடும் முதலமைச்சர் மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.