tamilnadu

கூடுதல் பேருந்துகளை இயக்க போக்குவரத்து கழகம் முடிவு

சென்னை, மே 10 - சென்னையில் கூடுதலாக பணிமனைக்கு தலா 10 பேருந்துகளைகூடுதலாக இயக்க சென்னை மாநகர போக்குவரத்து கழகம் திட்டமிட்டுள்ளது. சென்னையில் ஊரடங்கு உத்தரவு இருந்தாலும் மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் தற்போது அரசு ஊழியர்கள், துப்பு ரவு ஊழியர்கள் சென்று வர  200 சிறப்பு  பேருந்துகள் இயக்கப்படுகிறது. அரசு  ஊழியர்கள் பணிக்கு வர உத்தரவிடப் பட்டுள்ளது. ஆயினும், பொதுபோக்குவரத்து வசதி இல்லாததால் அரசு ஊழியர்கள் பணிக்கு வராமல் உள்ளனர்.  பெரும்பாலான அரசு அலுவலகங்களில் 5 விழுக்காடு ஊழியர்களே பணியற்றுகின்றனர். சில அலு வலகங்கள் திறக்கப்படாமலே உள்ளது. எனவே, அரசு ஊழியர்களுக்கு பொது போக்குவரத்து வசதி ஏற்படுத்தி தரும் வகை யில்  பணிமனைக்கு தலா 10 பேருந்துகளை கூடுதலாக இயக்க பரிசீலிக்கப்பட்டு வரு கிறது. முதற்கட்டமாக ஏற்கெனவே இயக்கும் 200 பேருந்துகளோடு மேலும் 140  பேருந்துகளை உடனடியாக இயக்க உள்ள னர்.

;