tamilnadu

வாக்குப்பதிவு முறைகேடுகள் குறித்து அறிக்கை அளிக்க உத்தரவு

சென்னை, ஏப்.19-வாக்குப்பதிவின் போது முறைகேடு நடைபெற்றதாக வந்த புகார்களின் பேரில் அதிகாரிகளிடம் அறிக்கை பெறப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு செய்தி யாளர்களிடம் கூறினார். 4 தொகுதிகளில் நடைபெற உள்ள இடைத் தேர்தல் பற்றிய அறிவிப்பு வருகிற 22-ந்தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுமென அவர் குறிப்பிட்டார். பறக்கும்படை சோதனை இனி அந்தந்த மாவட்டங்களில் மட்டும் தான் நடத்தப்படும் என்றும் அவர் கூறினார். ரஜினிகாந்தின் வலது கையில் மை வைக்கப்பட்டது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், இது பொதுவான தவறுதான் என்றார். (விவரம்: 5)

;