சென்னை,ஜூலை.23- சென்னை ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதிக்கு ட்பட்ட கொருக்குப் பேட்டை 41 ஆவது வட்டத்தில் புதிய தார்ச்சாலை அமைத்து தர வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் பொது மக்கள் செவ்வாயன்று (ஜூலை 23) எச்-6 காவல் நிலையத்தை முற்றுகை யிட்டனர். கொருக்குப்பேட்டை 41ஆவது வட்டத்தில் உள்ள கருமாரியம்மன் சாலை கடந்த 17 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டதாகும். இதுநாள் வரை எந்த பராமரிப்பும் இல்லாததால் சாலை பயன்படுத்த முடியாத நிலையில் குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் சாலைவிபத்து, போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் மழைக் காலத்தில் சாலையில் தண்ணீர் தேங்கி கிடக்கிறது. இதனால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுகிறது. இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் சம்மந்தப்பட்ட துறை எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளது. இந்நிலையில் புதிய தார்ச்சாலை அமைக்க வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பொதுமக்கள் சாலை மறியல் செய்ய முயன்றபோது, காவல்துறை யினர்அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் பொதுமக்கள், கொருக்குப்பேட்டை பிரதானசாலையில் ஊர்வலமாகச் சென்று எச்-6 காவல்நிலையத்தை முற்றுகையிட்டு ஆய்வாளரி டம் மறியல் செய்ய அனுமதிக்க கோரியும், சாலை வசதி ஏற்படுத்த அதி காரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தக் கோரியும் மனு அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட ஆய்வாளர் ஆனந்தராஜ், 15 நாட்களில் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இந்த போராட்டத்திற்கு விமலாரவிக்குமார் தலைமை தாங்கினார். சிபிஎம் மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.கே.மகேந்திரன், ஆர்.லோக நாதன், ஜி.ஜோதிபாசு, சி.சேகர், ஆர்கேநகர் சிபிஎம் பகுதிச் செயலாளர் தீபா உள்ளிட்ட பலர் பங்கேற்ற னர்.