tamilnadu

img

பணியிடங்களில் பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்

பணியிடங்களில் பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். அனைத்து பணியிடங்களிலும் பாலியல் புகார்  குழு அமைக்க வேண்டும். அதில் தொழிற்சங்க பெண் பிரதிநிதிகளை இணைக்க வேண்டும். பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகளை  தடுத்து சட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். பெண்களுக்கு தேவையான ஓய்வு நேரம் மற்றும் அடிப்படை வசதிகளை உத்தரவாதப்படுத்த வேண்டும். அங்கன்வாடி மற்றும் ஊட்டச்சத்து திட்டங்களுக்கான நிதியை குறைக்கக் கூடாது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் வேலூர், கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் மறியல் நடைபெற்றது. மாநில, மாவட்ட, வட்டத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.