tamilnadu

img

டிஎன்பிஎஸ்சி தேர்வு தேதி அறிவிப்பு  

மே 21 ஆம் தேதி குரூப் 2, குரூப் 2ஏ தேர்வுகள் நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி தலைவர் கா.பாலச்சந்திரன் அறிவித்துள்ளார்.  

இதுகுறித்து சென்னையில் தேர்வாணைய வளாகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தேர்வு அறிக்கையை டிஎன்பிஎஸ்சி தலைவர் கா.பாலச்சந்திரன் வெளியிட்டார்.

அதன் படி குரூப் 2, குரூப் 2ஏ தேர்வுகள் மே 21 ஆம் தேதி சனிக்கிழமை நடைபெறும். பிப்ரவரி 23 முதல் மார்ச் 23 ஆம் தேதி வரை http://www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். தேர்வுகள் 3 கட்டமாக நடைபெற உள்ளது.    

ஏற்கெனவே திட்டமிட்டபடி, இத்தேர்வுகளை இருவகைகளில்(தமிழ் அல்லது ஆங்கிலம்) எழுதலாம். மொத்தமுள்ள 200 மதிப்பெண்களில் 100 மதிப்பெண்களுக்கு தமிழில் தேர்வு நடத்தப்படும். துறை ரீதியான பணி நியமனம் குறித்து மார்ச் 3 ஆம் தேதி விரிவான அறிவிப்பு வெளியிடப்படும். குரூப் 2, குரூப் 2ஏ தேர்வுகளுக்கான  முடிவுகள், ஜூன் 5 ஆம் தேதி வெளியிடப்படும்.    

டிஎன்பிஎஸ்சி தேர்வு இனி காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரைக்கு பதில், காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை நடைபெறும். பிற்பகலுக்கான தேர்வுகள் வழக்கம்போல் நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் கா.பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

;