பாஜக நிர்வாகி அகோரத்திற்கு ஜாமின் வழங்கக் கூடாது என தமிழ்நாடு காவல்துறை எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
தருமபுரம் ஆதீனத்திற்கு மிரட்டல் விடுத்து வழக்கில் கைதான பாஜக நிர்வாகி அகோரம் ஜாமின் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்; பதில் மனுத்தாக்கல் செய்ய காவல்துறைக்கு உத்தரவிட்ட நீதிமன்றம், வழக்கு விசாரணையை ஏப்ரல் 10ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அகோரத்திற்கு எதிராக 47 வழக்குகள் நிலுவையில் இருப்பதால் பாஜக நிர்வாகி அகோரத்திற்கு ஜாமின் வழங்கக் கூடாது என காவல்துறை தெரிவித்துள்ளது.