tamilnadu

img

டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிராக தீர்மானம் கொண்டுவர தமிழ்நாடு அரசு முடிவு!

மதுரை மாவட்டத்தில் டங்ஸ்டன் சுரங்க உரிமையை உடனடியாக ரத்து வலியுறுத்தி தமிழ்நாடு அரசு தனி தீர்மானம் கொண்டுவர உள்ளதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சபாநாயகர் அப்பாவு, தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் வருகின்ற 9, 10 ஆகிய தேதிகளில் நடக்க உள்ளதாக தெரிவித்தார். மேலும் பேசிய அவர், முதல் நாள், கூடுதல் செலவினங்களுக்கான மானிய கோரிக்கையை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்ய இருக்கிறார்; அன்றைய தினமே, மதுரை மாவட்டத்தில் இந்துஸ்தான் ஜிங் லிமிடெட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட டங்ஸ்டன் சுரங்க உரிமையை உடனடியாக ரத்து செய்யவும், சம்பந்தப்பட்ட மாநில அரசின் அனுமதி இன்றி சுரங்க உரிம ஏலங்களை மேற்கொள்ளக்கூடாது எனவும் ஒன்றிய அரசை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு தனி தீர்மானம் கொண்டுவர உள்ளதாக தெரிவித்துள்ளார்.