டெல்டா மாவட்டங்களில் முக்கிய மாவட்டமாக திகழும் திருவாரூரில், பெரும்பா லான சாலைகள் சேதம் அடைந்து மக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன. திருவாரூர் நகரில் பெரும்பாலான சாலைகள் குண்டும், குழியுமாக காட்சி யளிக்கிறது. திருவாரூர் பழைய பேருந்து நிலையத்தில் கட்டுமானப் பணிகள் நடைபெறுவதால் பழைய பேருந்து நிலையம் முழுவதும் அடைக்கப் பட்டு ஒருவழி பாதையாக மாற்றப் பட்டுள்ளது.
இந்த ஒரு வழிச்சா லையை நாளொன்றுக்கு பத்தாயி ரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயன்படுத்தி வரும் சூழலில், தற்போது அந்த சாலையும் பெரு மளவில் சேதமடைந்து பெரிய அள விலான பள்ளங்கள் உருவாகி யுள்ளன. அதேபோல திருவாரூர் நகர் பகுதியிலும், சாலை பெரு மளவில் சேதமாகியுள்ளது. திருவாரூர் தெற்கு வீதியில் இருந்து பனகல் சாலை செல்லும் வழியில் கடந்த சில நாட்களுக்கு முன் வடிகால் பணிக்காக பள்ளங் கள் தோண்டப்பட்டு, வடிகால் பணி நிறைவடைந்த பிறகும் சாலைகள் முறையாக அமைக்கப்படாமல் உள்ளன.
இதனால் அந்த வழியே பயணிக்கும் பள்ளி மாணவர்கள் தினமும் அவதியடைகின்றனர். வரைமுறையின்றி சாலை அமைப்பு இதேபோல தேரோடும் திரு வாரூரின் நான்கு ரத வீதிகளில் சிமெண்ட் சாலை போடப்பட்டு கிட்டத்தட்ட 20 ஆண்டுகளை நெருங்கும் வேளையில், சாலை களின் பெரும்பாலான பகுதிகளில் பெரிய பள்ளங்கள் ஏற்பட்டு விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. தற்போது புதுத்தெரு பகுதி யில் சாலை புதிதாக போடப்பட்டு விரிவாக்கம் செய்யப்பட்டது. அதாவது எந்தவித வரைமுறையும் இன்றி சாலையின் நீள, அகலம் குறித்து கவலைப்படாமல், சாலை யோரம் இருக்கும் குடியிருப்பு களின் சுவர் வரை சாலையை அமைத்துள்ளனர்.
மேலும் சாலை யின் நடுவே உள்ள பாதாளச் சாக்கடை குழியை திறந்து மூடும் வகையில் உள்ள பகுதி உட்பட எதை பற்றியும் கவலைப்படாமல் அவை அனைத்தையும் மூடி சாலை அமைத்துள்ளனர். குறிப்பாக புதுத்தெரு, எம்ஜிஆர் சிலை எதிரில் நான்கு வழிச்சாலை அளவுக்கு மீறி அகலமாக போடப் பட்டது. அதன் அருகிலேயே உள்ள தனியார் பள்ளி மற்றும் குடி யிருப்புகளுக்குச் செல்லும் சாலை குறுகியுள்ளது. மேலும் வடக்கு கடைத்தெரு பகுதியில், ஒரு வழிச் சாலை அளவுக்கு மிகக் குறுகலாக சாலையை அமைத்துள்ளனர். சாலையாக மாறும் தரைகள் இவ்வாறு எந்த ஒரு திட்டமிட லும் இல்லாமல், எங்கெல்லாம் தரை தெரிகிறதோ அங்கெல்லாம் சாலை அமைத்து, மக்கள் வரிப் பணத்தை வீணடித்து வருகின்ற னர். மிக முக்கியமாக புதுத்தெரு பகுதியில் மின்சார கம்பங்களை நடுவில் வைத்து இரண்டு பக்கமும் சாலை அமைத்துள்ளனர்.
இதேபோல அரசு அலுவ லர்கள், பள்ளி மாணவர்கள் அதிகம் பயன்படுத்தும் சாலையான துர்காலயா சாலை பகுதியில் சிறு மழை பெய்தாலும், சாலைகள் பெயர்ந்து மிகப் பெரிய பள்ளங்கள் ஏற்படுவது வாடிக்கையாக உள்ளது. துர்காலயா சாலையின் ஆரம்பம், முடிவு, நடுப்பகுதி என அனைத்து பகுதிகளிலுமே சாலை யின் தரம் மிக மோசமாக, குண்டும் குழியுமாக உள்ளது.
துர்காலயா சாலை மின்வாரி யம் அருகே உள்ள பகுதியில், அழகுபடுத்தும் வேலையை செய்யும் நெடுஞ்சாலைத் துறை, அதிலிருந்து 200 மீட்டர் தொலை வில் மிகப்பெரிய அளவில் சேத மடைந்திருக்கும் சாலையை சீர மைக்காமல் இருக்கிறது. இதனால் மழை காலங்களில் மழைநீர் வடிய வழி இல்லாமல், சாலைகளில் தேங்கி, புதிதாக போட்ட சாலை மீண்டும் சேதமடையும் சூழல் உள்ளது. மரங்களை வெட்டி சாலை விரிவாக்கம் எல்லாவற்றிற்கும் மேலாக கடந்த சில வருடங்களாக நெடுஞ் சாலைத் துறையால் விரி வாக்கம் செய்யப்பட்ட சாலை களின் ஓரங்களில் இருந்த மரங்கள் வேரோடு வெட்டி அகற்றப் பட்டன. ஆனால் இந்த விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளில் பெரும் பாலும், வாகனங்கள் மட்டுமே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
நாலு கால் மண்டபம் பகுதியாக இருந் தாலும், புதுத்தெரு பகுதியாக இருந்தாலும், வடக்கு வீதி, கீழ வீதி உள்ளிட்ட எந்த பகுதியாக இருந்தாலும், சாலை விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளில் வாக னங்கள் மட்டுமே சாலைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதற்கு, அந்தப் பகுதியில் மரங் களை வெட்டாமலே இருந்திருக்க லாம் என பொதுமக்கள் கருத்து தெரிவிக்கின்றனர். மழை நின்ற பிறகு சீரமைப்பு பணி துவங்கும் இதுகுறித்து நெடுஞ்சாலை துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, “மழை பெய்து கொண்டி ருப்பதால் சாலைகளை சீரமைப் பது சிரமமாக உள்ளது.
எவ்வளவு தான் சீரமைத்தாலும் சாலைகள் மீண்டும் குண்டும் குழியுமாக மாறி வருகின்றன. இந்த மாத இறுதி வரை மழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. எனவே மழை நின்ற பிறகுதான் சாலை களை சீரமைப்பதற்கான முயற்சி களை மேற்கொள்ள முடியும். விரிவாக்கம் செய்யப்பட்ட சாலைகளில் வெள்ளை கோடு வரைந்தால் மட்டுமே அப்பணி முழுமை பெறும். அதற்காகத்தான் வெள்ளைக் கோடு வரைந்து பணியை நிறைவு செய்தோம். துர்காலயா சாலை பகுதியை விரிவாக்கம் செய்வதற்கு அரசிடம் பரிந்துரை அனுப்பியுள்ளோம். நிதி ஒதுக்கிய பிறகு துர்க்காலயா சாலை பகுதியை விரிவாக்கம் செய்ய உள்ளோம்” என்றார். (ந.நி)