tamilnadu

img

திருப்பெரும்புதூர்,தென்சென்னை மற்றும் திருவள்ளூர் மக்களவைத் தொகுதி வாக்கு வேட்பாளர்

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் திருப்பெரும்புதூர் மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு செவ்வாயன்று (ஏப்.9) குன்றத்தூர் ஒன்றியம், ஆலந்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 10 ஊராட்சிகளில் வாக்கு சேகரித்தார். திமுக மாவட்டச் செயலாளர் தா.மோ.அன்பரசன், ஒன்றியச் செயலாளர் படப்பை மனோகரன், விசிக ஒன்றியச் செயலாளர் இரா.தென்னரசு, சிபிஎம் ஆலந்தூர் பகுதிச் செயலாளர் எஸ்.அரிகிருஷ்ணன் உள்ளிட்டு கூட்டணிக்கட்சியினர் கலந்து கொண்டனர்.


மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தென்சென்னை மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் முனைவர் த.சுமதி (எ) தமிழச்சி தங்கபாண்டியன் செவ்வாயன்று (ஏப்.9) தி.நகர் பகுதி 136, 141 வட்டங்களில் வாக்கு சேகரித்தார். இதில் சிபிஎம் தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஏ.பாக்கியம், செயற்குழு உறுப்பினர் எம்.குமார், பகுதிச் செயலாளர்கள் ஏழுமலை (திமுக), இ.மூர்த்தி (சிபிஎம்), உள்ளிட்டு கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.


மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் திருவள்ளூர் (தனி) மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் முனைவர் கே.ஜெயக்குமாரை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சின்னம்பேடு கிராமத்தில் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு கட்சியின் கிளைச் செயலாளர் கோவிந்தராஜ் தலைமை தாங்கினார். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.கே.மகேந்திரன், மாவட்டச் செயலாளர் எஸ்.கோபால், மாவட்ட செயற்குழு உறுப்பினர் டி.பன்னீர்செல்வம், பகுதிச் செயலாளர் இ.தவமணி, வாலிபர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் டி.மதன், பகுதி தலைவர் பிரசாந்த், திமுக ஊராட்சி செயலாளர் ரமேஷ், காங்கிரஸ் கட்சி நிர்வாகி பாஸ்கரன், விசிக நிர்வாகி ராஜ் ஆகியோர் பேசினர். பி-கிளைச் செயலாளர் திராவிடன் நன்றி கூறினார்.

;