tamilnadu

ரேசன் கடைகள் மூலம் தீபாவளித் தொகுப்பு வழங்குக!

சென்னை, அக். 3 - ரேஷன் கடைகளில் அத்தியாவசிய உணவுப் பொருட்களை தீபாவளித் தொகுப் பாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் தமிழ்நாடு மாநிலக் குழுக் கூட்டம் 02.10.2024 அன்று மாநில செயற்குழு உறுப்பினர் எஸ். நூர்முகமது தலைமையில் நடைபெற்றது. 

இக்கூட்டத்தில் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர்கள் பிரகாஷ் காரத், ஜி. ராம கிருஷ்ணன், மாநிலச் செயலாளர் கே. பால கிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் பி. சம்பத், உ. வாசுகி, பெ. சண்முகம் மற்றும் மாநில செயற்குழு, மாநிலக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்திலேயே மேற்கண்ட கோரிக்கையை முன்வைத்துத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

உணவுப் பொருள் விலைவாசி உயர்வு

அக்டோபர் 31 அன்று அனைத்துப்பகுதி மக்களாலும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. ஆனால், மிகக் கடுமையான விலைவாசி உயர்வின் காரணமாக உழைக்கும் மக்களுக்கு இது தித்திக்கும் தீபாவளியாக அமைவதற்கு மாறாக திண்டாடும் தீபாவளியாக மாறி விடும் சூழல் இருக்கிறது. சமூகப் பாது காப்புடன் கூடிய வேலையும், நிரந்தர வரு மானமும் சமூகத்தில் சிறு பகுதியின ருக்குத் தான் இருக்கிறது. மிகப் பெரும் பாலானவர்கள் முறைசாராத் தொழிலா ளர்களும், விவசாயக் கூலித் தொழி லாளர்களும், சிறு-குறு விவசாயிகளுமே ஆவர். இத்தகைய பகுதியினர் தீபாவளி பண்டிகையை மகிழ்ச்சியோடு கொண்டாட முடியாத அளவிற்கு நாடு முழுவதும் அனைத்து உணவுப் பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது.

பண்டிகை காலப் பொருட்கள்

தமிழ்நாட்டில் சுமார் 7 கோடி பேர் களை உள்ளடக்கிய 2.25 கோடி குடும்பங் களுக்கு ரேஷன் கடைகளே ஆதார மாக இருக்கின்றன. இதனைக் கணக்கில் கொண்டு தீபாவளியை எதிர்கொள்வதற்கும் ரேசன் கடைகள் வழியாக அனைத்துப் பகுதி மக்களுக்கும் தேவையான பொருட்களை வழங்குவது பொருத்தமாக இருக்கும்.

குறிப்பாக, அரிசி, சர்க்கரை, மைதா, கடலை மாவு, பாமாயில், கோதுமை, மண்ணெண்ணெய், பருப்பு வகைகள், ரவை, மல்லி, மிளகாய் வத்தல், சீரகம், மிளகு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட் களை ரேஷன் கடைகளில்  வழங்குவதன் மூலம் 7 கோடி மக்கள் பயன் அடையமுடியும். 

எனவே, ஏழை - எளிய மக்களின் நலன்  கருதி தமிழ்நாடு அரசு ரேஷன் கடைகளில் அத்தியாவசிய உணவுப் பொருட்களை தீபாவளி தொகுப்பாக  வழங்கிட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு அரசை கேட்டுக்கொள்கிறது.

இவ்வாறு கூட்டத்தில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டு உள்ளது.