திருவொற்றியூர், மே 21-திருவல்லிக்கேணியை சேர்ந்தவர் ராஜீவ்காந்தி. இவர் எர்ணாவூர் பகுதியில் பணியை முடித்துவிட்டு திங்களன்று இரவு வீட்டிற்கு ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார்.அப்போது ஆட்டோவில் உடன் பயணித்த 3 பேர்அவரை ஏமாற்றி அவரிடம்செல்போனை பறித்துக்கொண்டு தப்பியோடிவிட்டனர்.இதுகுறித்து ராஜீவ்காந்தி திருவொற்றியூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். எண்ணூர் விரைவு சாலையில் உள்ளகண்காணிப்புக் கேமராவை ஆய்வு செய்ததால்செல்போன் கொள்ளையர்கள் அடையாளம் தெரிந்தது. இதனையடுத்து பாரிமுனையில் செல்போன்களை விற்பனை செய்வதற்காக நின்று கொண்டிருந்தவர்களை மடக்கி பிடித்தனர்.விசாரணையில் அவர்கள் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஹரிஹரன், தனசேகரன் என்பதும் திருவொற்றியூரைச் சேர்ந்த சுரேந்திரன் என்பதும் தெரிய வந்தது.இவர்கள் மீது ஏற்கனவேவழிப்பறி வழக்குகள் நிலுவையில் உள்ளது. 3 பேரையும் காவல்துறையினர் கைதுசெய்து புழல் சிறையில் அடைத்தனர். அவர்களிடம் இருந்த செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.