tamilnadu

img

பாலியல் தொல்லை: நிரந்தர பணிநீக்கம் - போக்குவரத்துறை எச்சரிக்கை  

போக்குவரத்து கழக வரலாற்றில் இது ஒரு கருப்பு நிகழ்வு ஆகும்.  இதுபோன்ற நிகழ்வுகள் நடந்தால் நிரந்தர பணி நீக்கம் செய்யப்படுவீர் என போக்குவரத்துறை எச்சரித்துள்ளது.  

விழுப்புரத்திலிருந்து கொத்தமங்கலம் சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்தில் கல்லூரி மாணவிக்கு, நடத்துனர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து மாணவி காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் பேருந்து நடத்துனர் சிலம்பரசன் கைது செய்யப்பட்டார். மேலும் நடத்துனருக்கு உடந்தையாக இருந்த ஓட்டுனர் அன்பு செல்வனையும் போலீசார் கைது செய்தனர். அதனை தொடர்ந்து இருவரும் தற்காலிக பணியிடை நீக்கம் செய்தனர்.    

இது தொடர்பாக போக்குவரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், விழுப்புரம் அருகே ஓடும் பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த  விவகாரத்தில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நடத்துனர் சிலம்பரசன் மற்றும் உடந்தையாக இருந்த ஓட்டுனர் அன்புச்செல்வன் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.      

இந்த சம்பவம் போக்குவரத்து கழகத்திற்கு தலைகுனிவையும், களங்கத்தையும் பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. போக்குவரத்து கழக வரலாற்றில் இது ஒரு கருப்பு நிகழ்வு ஆகும். இதுபோன்ற நிகழ்வுகளை வரும் காலங்களில் போக்குவரத்து கழக பணியாளர்கள் அனுமதிக்கக்கூடாது, மீறி ஈடுபடும் பணியாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு நிரந்தர பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

;