மோட்டார் வாகன பாதுகாப்புச் சட்டம் 2019ஐ திரும்ப பெற வலியுறுத்தி திருவள்ளூர் ரயில் நிலையம் அருகில் வெள்ளியன்று (செப்.6) சிஐடியு ஆட்டோ தொழிலாளர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தின் திருவள்ளூர் நகர தலைவர் ஜி.சங்கர்தாஸ் தலைமை தாங்கினார். இதில் சிஐடியு மாநிலச் செயலாளர் எஸ். கே.மகேந்திரன், மாவட்டச் செயலாளர் கே.ராஜேந்திரன், பொருளாளர் என்.நித்தியானந்தம், சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஏ.கரிமுல்லா, மாவட்டச் செயலாளர் எம்.சந்திரசேகரன், மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் தினேஷ் உள்ளிட்டோர் பேசினர்.