திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் நெடுஞ்சாலை மற்றும் ஆங்காடு ஆகிய பகுதிகளில் ஆட்டோ தொழிலாளர் சங்கத்தின் (சிஐடியு )புதிய கிளைகள் துவக்கப்பட்டது. சங்கத்தின் மாவட்ட துணைச் செயலாளர் இ.குமார் சங்க கொடியை ஏற்றினார். ஒன்றியத் தலைவர் காந்தாராவ் தகவல் பலகையை திறந்து வைத்தார். ஆங்காடு பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்டச் செயலாளர் எம்.சந்திரசேகரன் சங்க கொடியை ஏற்றி வைத்தார். ஒன்றியச் செயலாளர் சா.வேலு தகவல் பலகையை திறந்து வைத்தார். இதில் கிளைத் தலைவர் எம்.தனசேகர், செயலாளர் என்.பிரேம்நாத், பொருளாளர் சி.ஸ்ரீகாந்த் உட்பட பலர் கலந்து கொண்டனர்.