tamilnadu

img

தமிழகத்தில் நவம்பர் 8 வரை மழை இருக்கும் - வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் 

தமிழக கடலோர மாவட்டங்களில் காலையிலும், மாலையிலும் கனமழை பெய்யும் என தமிழ்நாடு வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் டிவிட் செய்துள்ளார்.

வடகிழக்கு பருவமழை இன்று முதல் தீவிரமடையும் என இந்தியா வானிலை ஆய்வு மையம்  கூறியுள்ளது. தமிழகம் முழுவதும் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பொழியும் என்றும் கூறியுள்ளது. இந்த நிலையில் சென்னை முதல் காரைக்கால் வரை மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் அடுத்து வரும் 8 ஆம் தேதி வரை பருவமழை தீவிரமடையும் என தமிழ்நாடு வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தனது டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். இன்று சென்னை, பாண்டிச்சேரி, கடலூர், நாகை, திருவாரூர், காரைக்கால், ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும்.

தென் தமிழகத்தில் உள் மாவட்டங்களிலும் மதுரை, விருதுநகர், திருநெல்வேலி, தென்காசி, தேனி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இன்று மேற்கு மாவட்டங்களான திருப்பூர், நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் கனமழை நீடிக்கும். நவம்பர் 8ஆம் தேதி வரைக்கும் தேனி, விருதுநகர், தென்காசி, திண்டுக்கல், திருநெல்வேலியில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. வடகிழக்குப் பருவமழையை பொறுத்தவரைக்கும் கடலோர மாவட்டங்களில் காலை நேரங்களிலும், உள் மாவட்டங்களில் மாலை நேரங்களிலும் இரவிலும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.