tamilnadu

தமிழ்நாட்டின் பள்ளிகளில் மத போதனைகளுக்கு இடமில்லை

இந்தியாவில் உள்ள மக்கள் அறி வியல் இயக்கங்களின் ஓர் அங்கமான தமிழ்நாடு அறிவியல் இயக்கம், அறிவியல்  பரப்புவதற்காகவும் அறிவியல் மனப்பான்மையை வளர்க்கவும், இந்திய அரசியல் சாசனத்தின் 51 A (h) பிரிவை உயர்த்திப் பிடிக்கவும் கடந்த நாற்பது ஆண்டுகளாக பாடுபட்டு வருகிறது.

அரசியல் அமைப்பு சாசனம் வகுத்து அளித்துள்ள  ‘வேற்றுமையில் ஒற்றுமை’ என்ற  உன்னதமான கொள்கையின் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளோம். சமீபத்தில் பழனியில் நடந்து முடிந்த மாநாட்டுத் தீர்மானங்கள், இதனை நேரிடை யாக அச்சுறுத்துவதாகவும்  பள்ளிக் கல்வியின் மதச்சார்பின்மைக்கு ஊறு விளைவிப்பதாகவும் அமைந்துள்ளது.

கல்வி என்பது ஓர் மதச்சார்பற்ற செயல்பாடு, மாணவர்களின் முழுமையான வளர்ச்சிக்காகவும், மதி நுட்பத்தை வளர்த்தெடுக்கவும் உருவாக்கப்படுகிறது. எந்தவகையான பள்ளி நிர்வாகமாக இருந்தாலும் அங்கு சமூகத்தின் அனைத்து பிரிவு குழந்தைகளும் அனைத்து மத நம்பிக்கை சார்ந்த மாணவர்களும் கல்வி கற்க வருகிறார்கள்.இப்படியான சூழலில் ஒரேயொரு குழந்தை  கூட   மதப் பிரச்சாரம், மத ரீதியான செயல்பாடுகளுக்கு ஆட்பட்டு விடக் கூடாது.

மதம் தனிப்பட்ட மனிதர் சார்ந்தது. தான் நம்பும் மதத்தை பின்பற்ற ஒரு மனிதருக்கு முழு உரிமை உண்டு. அதற்கு எந்தத் தடை யும் இல்லை. தடைகளை உருவாக்கவும் கூடாது. அத்தகைய நம்பிக்கை விமர்சனங் களுக்கு அப்பாற்பட்டது. அதேசமயம் கல்வி என்பது பகுத்து அறியும் திறனை வளர்ப்பது. திறனாய்வு மனப்பான்மையை வளர்த்தெடுப்பது. இத்தகைய கல்வியைத் தரும் கல்விக் கூடங்களில் மத போதனைகள் கூடாது. வகுப்பறைகள் மதச்சார்பற்ற தளங்களாகவே தொடர வேண்டும். வழி பாட்டு நடைமுறைகளில் ஈடுபடவோ, மதச்செயல்பாடுகளில் ஈடுபடுத்துவதோ, மத நூல்களை வாசிக்கத் தூண்டுவதோ கூடாது.

தமிழ்நாடு பன்முக  கலாச்சாரம் கொண்ட மாநிலம். பல்வேறு விதமான வழிபாட்டு நம்பிக்கைகள், முறைகள் இங்கு உள்ளன. ஒற்றை வழிபாட்டு முறையை வலி யுறுத்துவதோ, ஒரே தெய்வத்தை வழிபடும் படி கூறுவதோ சரியான அணுகுமுறை யாகாது.  அது தமிழ்நாட்டின் பாரம்பரிய பன்முக கலாச்சாரத்தை  தனிமைப்படுத்திவிடும்.

காலத்தால் முகிழ்த்து எழுந்த  ‘வேற்றுமை யில் ஒற்றுமை’  என்றபன்முக கலாச்சாரம், பல தெய்வ வழிபாடு, ஒற்றை தெய்வ வழி பாட்டு நடைமுறைகள் மூலம் ஆபத்திற்கு உள்ளாகி விடும். தமிழ்நாட்டின் பள்ளிக் கல்வித் துறை, தமிழக பள்ளிகளில் எந்த  மதச்சார்புத் தன்மைக்கும் இடம் தரக் கூடாது. மத நூல்களை படித்தல், பாராயணம் செய்தல் எந்த வகையிலும் கூடாது.

எனவே தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இந்து அறநிலையத்துறை கோயில்களையும் அதன் சொத்துக்களை நிர்வாகம் செய்வதையும், கணக்கு வழக்கு களை பார்ப்பது போன்ற பணிகளை மட்டுமே  மேற்கொள்ள வேண்டும். பள்ளிக் கல்வித்து றையின் பாடத்திட்டம், பாடம் சார்ந்த, சாராத செயல்பாடுகளில் தலையீடுசெய்யக்கூடாது என்று வலியுறுத்துகிறது.

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின்  மாநிலத்தலைவர் முனைவர் டி.திருநாவுக்கரசு, மாநிலப் பொதுச் செயலாளர் எம்.எஸ்.முஹமது பாதுஷா மற்றும் பொருளாளர் எஸ். சுதாகர் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கை