tamilnadu

img

தலித்துகள் வசிக்கும் பகுதிகளில் போதுமான குடிநீர் வசதி இல்லை

சென்னை, ஜூலை 28 - சென்னையில் தலித் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் 58 விழுக்காட்டி னருக்கு மாநகராட்சி குடிநீர் இணைப்பு வழங்காமல் உள்ளது என்று தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்ன ணியின் துணைப் பொதுச் செயலாளர் எஸ்.கே. மகேந்திரன் தெரி வித்துள்ளார். முன்னணியின் தென்சென்னை மாவட்ட  3வது மாநாடு ஞாயிறன்று (ஜூலை 28) சைதாப்பேட்டை யில் நடைபெற்றது. இந்த மாநாட்டை தொடங்கி வைத்து மகேந்திரன் பேசுகையில், தலித் மக்கள் பெரும்பான்மையாக உள்ள பகுதிகளில் 12 விழுக்காட்டி னருக்கு கழிப்பிட வசதி இல்லை. பொதுப்பய ன்பாட்டு இடங்களான பூங்கா, விளையாட்டுத் திடல்கள் போன்றவையும் தலித் மக்கள் பயன்படுத்த முடியாத அளவிலேயே உள்ளன என்றார். கிராமப்புறங்களில் ஊர், சேரி என பிரிந்து கிடக்கிறது. அதேபோன்று சென்னையில் சைவ, அசைவ உணவு பழக்கம் உள்ளவர்களுக்கான அடுக்குமாடி குடியி ருப்புகளாக கட்டப்பட்டு பிரிக்கப்படுகிறது. திறந்த வெளி நிலங்களைக் கூட தலித் மக்கள் பயன்படுத்த முடியாத வகையில் பூங்கா அமைத்து, குடியிருப்போர் சங்கம் பராமரிப்பின் கீழ் கொண்டு செல்கின்றனர். இவ்வாறாக தண்ணீர், கழிப்பிடம் வசதி பெற முடியாமலும், பொதுப் பயன்பாட்டிலிருந்தும் தலித் மக்கள் ஒதுக்கி வைக்கப் படுகின்றனர் என்றும் அவர் கூறினார்.

172 போராட்டத்திலும் வெற்றி

மாநாட்டை நிறைவு செய்து பேசிய அமைப்பின் மாநிலத் தலைவர் பி.சம்பத், தீண்டாமைக்கு எதிராக நடத்தப்பட்ட 172 போராட்டங்களிலும் முன்னணி வெற்றி பெற்று ள்ளது என்று பெரு மிதத்தோடு குறிப்பிட்டார். சாதி-தீண்டாமை ஒழிப்பு போராட்டங்கள் முன்ன ணியின் தலையீட்டிற்கு பிறகு,  ஜனநாயகத்திற்கான போராட்டமாக உருமாற்றம் பெற்றுள்ளது என்றும் அவர் கூறினார். இந்த மாநாட்டில், சென்னையில் உள்ள பஞ்சமி நிலங்களை மீட்டு உரியவர்களுக்கு வழங்க வேண்டும், எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கான உதவித்தொகையை உடனடியாக வழங்க வேண்டும், எஸ்பிஐ வங்கி பணி நியமனத்தில் 10 விழுக்காடு இடஒதுக்கீடு குளறுபடிகளை சரி செய்ய வேண்டும், எஸ்சி, எஸ்டி மேம்பாட்டு நிதியை முறை யாக செலவிட வேண்டும், செம்மஞ்சேரி, கண்ணகிநகர் பகுதிகளில் சுகாதார, கல்வி வசதிகளை மேம்படுத்த வேண்டும், புதிய கல்விக் கொள்கையை ரத்து செய்ய வேண்டும், சைதாப்பேட்டை குப்பை கிடங்கை அகற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன. மாநாட்டிற்கு சங்கத்தின் தலைவர் ச.லெனின் தலைமை தாங்கினார். சைதை பகுதி நிர்வாகி கே.மணிகண்டன் வர வேற்றார். மாவட்ட துணைத் தலைவர் எஸ்.சந்தானம் அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். வேலை அறிக்கையை மாவட்டச் செயலாளர் ப.சுந்தரமும், வரவு செலவு அறிக்கையை பொருளாளர் எஸ்.ஹேமாவதியும் சமர்ப்பித்தனர். சமூக செயற்பாட்டாளர் பேரா. அ.மார்க்ஸ், விசிக வணிகர் அணிச் செயலாளர் ராஜேந்தி ரன் உள்ளிட்டோர் பேசினர். சைதை பகுதி நிர்வாகி எல்.குணசேகரன் நன்றி கூறினார்.

நிர்வாகிகள்
முன்னணியின் மாவட்டத் தலைவராக ச.லெனின், செயலாளராக பி.சுந்தரம், பொருளாளராக எஸ்.சந்தானம் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.