tamilnadu

முதல்வர் பாதுகாப்பு வாகனங்களுக்குள் புகுந்த இளைஞர்கள்

சென்னை, மே 21- தமிழக முதல்வரின் பாதுகாப்பு வாக னங்களுக்கு இடையே புகுந்து இருசக்கர வாகனத்தை ஆபத்தான முறையில் ஓட்டிச் சென்றதாக இரண்டுபேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். புதன் கிழமை பிற்பகல் தமிழக முதல்வர் எடப் பாடி பழனிசாமி கீரீன்வேஸ் சாலையில் சென்று கொண்டிருந்தது. விவேகானந்தர் இல்லம் அருகே சென்றபோது ஐஸ் ஹவுஸ் பகுதியிலிருந்து இரு சக்கர வாக னத்தில் வந்த இளைஞர்கள் திடீரென உள்ளே நுழைந்தனர். இதையடுத்து அவர் களை காவல்துறையினர் கைது செய்த னர்.