tamilnadu

தண்ணீர் பஞ்சத்தால் தவிக்கிறது தமிழகம் விரைந்து செயல்பட அரசுக்கு வைகோ கோரிக்கை

சென்னை,ஜூன் 11- தமிழகத்தின் தலைநகர் சென்னை தொடங்கி 22 மாவட் டங்களுக்கு மேல் அனைத்துப் பகுதிகளிலும் தண்ணீர் பஞ்சத் தால் மக்கள் தவிக்கின்ற நிலைமை வேதனை அளிப்பதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறி யிருப்பதாவது:- பருவ மழை பொய்த்து, சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஏரிகள் வறண்டு போவதையும், நிலத்தடி நீர் ஆயி ரம் அடிக்குக் கீழே போனதையும் தமிழக அரசு முன் கூட்டியே கணித்துத்தக்க ஏற்பாடுகளைச் செய்யத் தவறியதால்தான் இன்று சென்னை மக்கள் தண்ணீ ருக்குத் தவித்து நடுத்தெருவில் போராடும் நிலைமை உரு வாகி இருக்கின்றது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களைச் சுற்றி 3600 நீர் நிலைகள் உள் ளன. அவற்றை முறையாக தூர்  வாரி பராமரித்தி ருந்தால் 80 டி.எம்.சி. தண்ணீரை சேமித்து வைத்திருக்க முடியும். பெய்த  சொற்ப மழை நீரும் அரசின் அலட்  சியப்போக்கால் வீணானது. தமிழகம் முழுவதும் குடிநீர் இன்றி மக்கள் அல்லல்பட்டுத் துடித்துக் கொண்டிருக்கின்ற நிலையில், கோடைகால குடிநீர் விநியோகத்துக்காக ரூ. 400 கோடி  ஒதுக்கப்பட்டிருப்பதாக கடந்த 7 ஆம் தேதிதான் உள்ளாட்சித்  துறை அமைச்சர் தெரிவித்தி ருக்கிறார். தமிழக அரசு இயந்திரம் போர்க்கால வேகத்தில் முடுக்கி விடப்பட்டு, மாற்று வழிகளைப் பயன்படுத்தித் தண்ணீர் பிரச்ச னையைத் தீர்க்க விரைந்து செய லாற்ற வேண்டும் என்று வலி யுறுத்துகின்றேன். இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.