tamilnadu

img

அரசு பேருந்தை சிறைபிடித்து கிராம மக்கள்

அவிநாசி பிப்.28 அவிநாசி அருகே அரசு பேருந்தை சிறைபிடித்து பொது மக்கள் பொதுமக்கள்  போராட்டத்தில் ஈடுபட்டனர். அவினாசி ஒன்றியம், உப்பிலிபாளையம் ஊராட்சியில் சுமார் இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட  குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் போக்குவரத்திற்கு பெரும்பாலும் அரசுப் பேருந்தையே பயன்படுத்தி வந்தனர். சோமனூரில் இருந்து கருமத்தம்பட்டி, கிட்டாம்பாளையம், உப்பிலிபாளையம், கருவலூர் வழியாக அவிநாசி வரை அரசு நகரப்பேருந்து இயக்கப்பட்டது. நாள்தோறும் எட்டுமுறை இப்பேருந்து வந்து சென்றது.  இந்நிலையில் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி உப்பி லிபாளையம் பகுதிக்கு அரசுப் பேருந்தின் இயக்கம் இரு நடைகளாகக் குறைக்கப்பட்டது. இதனால் பள்ளி குழந்தை கள், வேலைக்குச் செல்வோர் உள்ளிட்ட அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து கருமத்தம்பட்டியில் உள்ள அரசுப் போக்குவரத்துக்கழக கிளை பணிமனையில் மேலாளரிடம் முறையிட்டனர். அப்போது அவர் நாங்க ளாக நிறுத்தம் செய்யவில்லை,  மேலிருந்து நிறுத்தச் சொன் னதாக கூறப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஆவேசம டைந்த பொதுமக்கள் வெள்ளியன்று காலை உப்பிலிபாளை யத்தில் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக பேருந்தை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த அவிநாசி காவல் துணை ஆய்வாளர் செந்தில் பேச்சுவார்த்தை நடத்தி பேருந்தை விடுவித்தார்.