வேலூர், நவ.22- வேலூர் மாவட்டம் அரியூர் அடுத்த விஸ்வ நாத நகர் பகுதி மக்கள் 50க்கும் மேற்பட் டோர் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த னர். அப்போது வார்டு வரையறை என்ற பெய ரில் தங்களது வாக்குரிமையை பறிப்ப தாகக் கூறி கையில் பதாகைகளை ஏந்தி கோஷமிட்டனர். மேலும் கையில் பதாகைகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளே நுழைந்த பொதுமக்கள், தாங்கள் வைத்தி ருந்த ஆதார், வாக்காளர் அடையாள, குடும்ப அட்டைகளை தரையில் போட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு வந்த காவல்துறையினர் பொது மக்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். பாதிக்கப்பட்ட பொதுமக்கள் கூறுகை யில், “எங்கள் பகுதி வேலூர் மாநகராட்சியின் 48 வது வார்டில் இருந்து வந்தது. அந்த வார்டுக்குட்பட்ட பகுதியில் தான் நாங்கள் இதுவரை வாக்களித்து வந்தோம். ஆனால் தற்போது வார்டு வரையறை என்ற பெய ரில் எங்கள் பகுதியை 58 வது வார்டுக்கு மாற்றிவிட்டனர். இதன் மூலம் சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு சென்று வாக்க ளிக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே வார்டு வரையறை என்ற பெயரில் எங்களது அடிப்படை உரிமையான வாக்குரிமைகளை மாவட்ட நிர்வாகம் பறிப்பதாக தெரி வித்தனர்.