சின்னாளபட்டி, மே 20-திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி அருகே உள்ள தவசிமடை கிராமத்தை சேர்ந்தவர் மரியராஜ் மகன் ஜான்ஹன்றி( 18). கன்னிவாடி அருகே கரிசல்பட்டியில் உள்ளஉறவினர் வீட்டிற்கு, இரு சக்கர வாகனத்தில் வந்திருந்தார். திண்டுக்கல் நோக்கி புறப்பட்டபோது, கரிசல்பட்டியை சேர்ந்த சோணைமுத்து (31), மாரிமுத்து மகன் தினேஷ் (10)ஆகியோரை தனதுமோட்டார் சைக்கிளில் அழைத்துச்சென்றார். கோனுார் பிரிவு அருகே எதிரேவந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதி விட்டு நிற்காமல் சென்றது. இந்த சம்பவத்தில் 3 பேரும், சாலையோர பள்ளத்தில்துாக்கி வீசப்பட்டனர். பலத்த காயங்களுடன் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் ஜான்ஹன்றி அங்குசிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சோணைமுத்து, தினேஷ் ஆகியோருக்கு தீவிரி சிகிச்சைஅளிக்கப்பட்டு வருகிறது.