tamilnadu

img

தொழிற்சங்க மாமேதை தோழர் விபி.சிந்தன் நூற்றாண்டு நிறைவையொட்டி

தொழிற்சங்க மாமேதை தோழர் விபி.சிந்தன் நூற்றாண்டு நிறைவையொட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வில்லிவாக்கம் பகுதி 97 வட்டக் கிளை சார்பில் வியாழனன்று (மே 9) குப்புசாமி நகரில் பொதுமக்களுக்கு கோடை வெயிலுக்கு இதமாக மோர் வழங்கப்பட்டது. கோடைகாலம் முழுவதும் இக்கிளைசார்பில் மோர், ரஸ்சனா, எலுமிச்சை, கிர்னி, தர்பூசணி ஜூஸ், பால்சர்பத், ரோஸ்மில் உள்ளிட்ட பழச்சாறு வழங்கப்பட உள்ளதாக வடசென்னை மாவட்டச்செயலாளர் எல்.சுந்தரராசன் தெரிவித்தார். இந்நிகழ்வில் வில்லிவாக்கம் பகுதி செயலாளர் எம்.ஆர்.மதியழகன், செயற்குழு உறுப்பினர் ஆர்.முரளி, மூத்த உறுப்பினர் லோகைய்யா, வி.டில்லிபாபு, என்.சி.தாமஸ், ஆர்.அருள், ராமமூர்த்தி, முருகேசன், சதாசிவம், ரவி ஆகியோர் பங்கேற்றனர்.