tamilnadu

img

போக்குவரத்து ஊழியர் வேலை நிறுத்தம் தற்காலிகமாக ஒத்திவைப்பு

சென்னை, ஜன. 10 - போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. 8 ஆண்டுகளாக ஓய்வூதி யர்களுக்கு வழங்கப்படாமல் உள்ள அகவிலைப்படி உயர்வை  வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 6 அம்சக் கோரிக்கை களை வலியுறுத்தி ஜன.9 அன்று போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தை தொடங்கி னர்.  

இந்த போராட்டத்தின் இரண்டாவது நாளான புதனன்று ( ஜன.10) மாநிலம் முழுவதும் அனைத்துப் போக்குவரத்து தொழிற்சங்க  கூட்டமைப்பு சார்பில் மறியல் போராட்டம் நடை பெற்றது.  சென்னையில் மாநகர போக்குவரத்துக் கழக அலு வலகத்தை முற்றுகையிட்டு போக்குவரத்து ஊழியர்கள், ஓய்வூதியர்கள் போராட்டம் நடத்தி னர். இவர்களை காவல்துறை யினர் கைது செய்தனர். அரசுப் போக்குவரத்து ஊழியர் சங்கத்தின் தலைவர் ஆர்.துரை தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் சிஐடியு தலைவர் அ.சவுந்தரராசன், கே.ஆறுமுக நயினார், வி.தயானந்தம் மற்றும் வெங்கடேசன் (எம்எல்எப்), நாக ராஜன் (பணியாளர் சம்மேள னம்), கே.கர்சன் (அரசுப் போக்கு வரத்துக் கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பு) உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

முற்றுகைப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ஒன்றிய, மாநில அரசு மற்றும் பொதுத்துறை ஓய்வூதியர்களும் அதன் மாநில ஒருங்கிணைப்புக் குழு தலைவர் நெ.இல.சீதரன் தலைமையில் பங்கேற்றனர்.  நீதிமன்றத்தின் வேண்டுகோள் இந்த நிலையில் சென்னை  உயர்நீதிமன்றத்தில் நடை பெற்ற வழக்கை தொடர்ந்து அ.சவுந்தரராசன் செய்தியாளர்களிடம் பேசினார். 

அப்போது அவர் கூறியதாவது: வேலை நிறுத்தம் வெற்றிகரமாக  நடந்தது. வேலை நிறுத்தத்தின் கார ணமாக அரசுக்கு கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டிய அழுத்தம் அதிகரித்துள்ளது. வரவுக்கும் செல வுக்குமான வித்தியாசத் தொகையை  2022 ஆம் ஆண்டு முதல் அரசு வழங்கி இருந்தால் கோரிக்கைகளே எழுந்தி ருக்காது.

நீதிமன்றம் போராட்டத்தை தற்கா லிகமாக ஒத்தி வைக்கத்தான் கூறி யது; ரத்து செய்ய சொல்லவில்லை. போராட்டத்தை சட்டவிரோதம் என்று அறிவிக்க கோரியதை நீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டது.  

ஓய்வூதியர்களுக்கு  ஒரு மாதத்  திற்கு குறைந்தபட்சம் 2 ஆயிரம் ரூபா யாவது இடைக்கால நிவாரணமாக வழங்குமாறு நீதிமன்றம் கூறியது. ஆனால் அதையும் அரசு ஏற்க மறுத்து விட்டது. அப்போது, ‘அரசு விடாப்பிடி யாக நடந்து கொள்கிறது’ என்று  குறிப்பிட்ட நீதிபதிகள், “கோரிக்கை கள் அனைத்தும் நியாயமானவை. பொங்கல் வருவதால் போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைத்து ஜன வரி 19 அன்று சமரச பேச்சுவார்த்தை யில் ஈடுபடுங்கள்.

அதன் பிறகு முடி வெடுங்கள்” என்று தொழிற்சங்கங்க ளுக்கு  அறிவுறுத்தினர். மேலும், போராடிய ஊழியர்கள் மீது எந்த  ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்றும் நீதிபதிகள் உத்தர விட்டுள்ளனர்.  அதனையேற்று போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைக்கிறோம்.

ஜன.19 பேச்சுவார்த்தை
ஜனவரி 19 அன்று நடைபெறும் பேச்சுவார்த்தையில் பங்கேற்போம். அதில் கோரிக்கைகளை வலுவாக வலி யுறுத்துவோம். 6 கோரிக்கைகளையும் நிறைவேற்றாமல் போராட்டம் முடி வுக்கு வராது. 

இவ்வாறு அ.சவுந்தரராசன் கூறினார்.

போக்குவரத்துத் தொழிலாளர் கோரிக்கை: முதல்வர் தலையிட்டு சுமூகத் தீர்வு காண்க!

புதன்கிழமை பிற்பகல் சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியின் அறிவுறுத்தலை ஏற்று, போக்குவரத்துத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தை தற்காலிகமாக ஒத்திவைத்தனர்.  முன்னதாக போக்குவரத்துத் தொழி லாளர் கோரிக்கைகள் குறித்து, மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செய லாளர் கே. பாலகிருஷ்ணன் புதனன்று  காலை அறிக்கை ஒன்றை வெளியிட்டி ருந்தார்.

அந்த அறிக்கை வருமாறு: போக்குவரத்து ஊழியர்கள் இரண்டா வது நாளாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். ஓய்வூதியர்களுக்கு 90 மாதங்களுக்கு மேலாக நிலுவையில் உள்ள பஞ்சப்படியை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை முன்வைத்திருக் கின்றனர்.  

டிசம்பர் மாதத்திலிருந்து பேச்சு வார்த்தை நடைபெற்றாலும் எந்த  கோரிக்கைகளுக்கும் தீர்வு எட்டப்பட வில்லை என்ற காரணத்தால் வேறு வழி யின்றி வேலைநிறுத்தத்திற்கு தள்ளப் பட்டுள்ளனர். போக்குவரத்துத் தொழிலா ளர்களின் கோரிக்கைகள் நியாயமற்றவை என்று யாராலும் ஒதுக்கிவிட முடியாது. தமிழகத்தில் புயல் மற்றும் வெள்ளப் பாதிப்புகள் இருந்த நிலையில், கடுமை யான நிதி நெருக்கடியைச் சந்தித்த போதி லும் பொங்கல் பண்டிகையை தமிழக மக்கள் மகிழ்ச்சியாக கொண்டாடுவதற்கு தமிழக அரசு ஆயிரம் ரூபாய் மற்றும் பொங்கல் பரிசுத்தொகுப்பை வழங்கி வருகிறது.

இந்த சூழ்நிலையில் போக்கு வரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் பொதுமக்களுக்கு பல்வேறு இடர்பாடுகளையும், சிரமங்களையும் ஏற்படுத்துவதுடன் சொந்த ஊருக்குத் திரும்ப முடியாத நிலையையும் ஏற்படு த்தும்.

பொங்கல் பண்டிகையை மகிழ்ச்சி யாக கொண்டாட வேண்டிய போக்கு வரத்துத் தொழிலாளர்களின் குடும்பங் களும் இந்த வேலை நிறுத்தத்தால் கவலையை சந்திக்கும் நிலை ஏற்படும். எனவே, தமிழ்நாடு முதலமைச்சர் நேரடியாக தலையிட்டு போக்குவரத்துத் தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்கு சுமுகத் தீர்வு காண வேண்டுமெனவும், வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வரவேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு கே. பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.