tamilnadu

img

செங்கொடி சங்கம் சார்பில் திருவொற்றியூர் மண்டல அலுவலகம் முன்பு துணைப் பொதுச்செயலாளர் டி.ராஜன் தலைமையில் பெருந்திரள் முறையீடு

மாதம் தோறும் 5ஆம் தேதி ஊதியம் வழங்க வேண்டும், நிலுவையில் உள்ள பணப்பயன்களை உடனடியாக வழங்க வேண்டும்  உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி செங்கொடி சங்கம் சார்பில் திருவொற்றியூர் மண்டல அலுவலகம் முன்பு துணைப் பொதுச்செயலாளர் டி.ராஜன் தலைமையில் வெள்ளியன்று (ஜன. 3) பெருந்திரள் முறையீடு நடைபெற்றது. இதில் தலைவர் எஸ்.கே.மகேந்திரன், பொதுச்செயலாளர் பி.சீனிவாசலு, துணைத் தலைவர் என்.கிருஷ்ணமூர்த்தி, துணை பொதுச் செயலாளர்கள் ஜி.முனுசாமி, கே.தேவராஜ் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.

;