தமிழகத்தில் தீபாவளி தினத்தன்று 2 மணிநேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
சுற்றுச்சூழல் மாசு படுவதை தவிர்க்கும் வகையில், தீபாவளி நாளில் இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என 2018ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதுள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் பட்டாசு வெடிக்கும் நேரத்தை சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் அறிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், உச்சநீதிமன்ற உத்தரவின்படி தீபாவளி அன்று காலை 6 மணி முதல் 7 மணி வரை பட்டாசு வெடிக்கலாம், இரவு நேரங்களில் இரவு 7 மணி முதல் 8 மணி வரை பட்டாசு வெடிக்கலாம் என அமைச்சர் அறிவித்தார்.