tamilnadu

img

‘மாண்டஸ் புயலை தமிழக அரசு சிறப்பாக கையாண்டது’

சென்னை, ஜன.9- மாண்டஸ் புயல், வட கிழக்குப் பருவமழையை அரசு சிறந்த முறையில் கையாண்டதால், சென்னை  மாநகரில் அதன் தாக்கம்  மிகக் குறைந்த அளவி லேயே இருந்தது என்று ஆளுநர் ஆர்.என்.ரவி பாராட்டினார். தமிழக சட்டப்பேர வையில் திங்களன்று (ஜன.9) அவர் ஆற்றிய உரையில் குறிப்பாக, சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் மழைக்காலம் தொடங்குவதற்கு முன்னரே, 261 கி.மீ. நீளமுள்ள மழை நீர் கால்வாய்கள் மற்றும் இதர வெள்ளத் தடுப்புத் திட்டங்களுக்காக 1,335 கோடி ரூபாய் அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதில் 209 கி.மீ. நீளமுள்ள  கால்வாய்கள் கட்டிமுடிக் கப்பட்டுள்ளன. மேலும், கொசஸ்தலையாற்றில் 360 கி.மீ. நீளத்திற்கு மிக  முக்கிய மழைநீர் கால்வாய் கள் போர்க்கால அடிப் படையில் கட்டமைக்கப் பட்டுள்ளன. இதன் விளை வாக, கடந்த காலங்களில் அதிகளவில் மழை வெள்ள பாதிப்பிற்கு உள்ளான  சென்னை மாநகரின் முக்கிய மான பகுதிகள், இந்தப் பருவ மழைக்காலத்தில் மிகக் குறைந்த அளவி லேயே பாதிப்படைந்தன. மழை வெள்ளத்தின் காரணமாக ஏற்படக்கூடிய போக்குவரத்து நெரிசலும் பெருமளவு குறைக்கப்பட்டு, மாநகரம் உடனடியாக இயல்பு நிலைக்குத் திரும்பியது. மாண்டஸ் புய லையும் வடகிழக்குப் பருவ  மழையையும் மிகச் சிறப்பாகக் கையாண்ட அரசிற்கு எனது பாராட்டு களைத் தெரிவித்துக் கொள் வதாக அவர் கூறினார்.