tamilnadu

img

மானியமில்லா எரிவாயு சிலிண்டர் விலை உயர்ந்தது

சென்னை,ஜூன் 01- மானியமில்லாத எரிவாயு சிலிண்டர் விலை 37 ரூபாய் வரை அதிகரித்துள்ளது. எண்ணெய் எரிவாயு நிறு வனங்கள் ஒவ்வொரு மாதமும், முதல் தேதியில்  எரிவாயு சிலிண்டர் விலை யை மாற்றி அமைத்து வருகின்றன. கடந்த மாதங்களில் விலை குறைந்த நிலையில், தற்போது தொழில் நடவடிக்கைகள் மீண்டு வருவதால் விலை ஏற்றம் தொடங்கியுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதத்திற்கு பிறகு தொடர்ந்து உயர்ந்து வந்த சிலிண்டர் விலை, கடந்த மார்ச் முதல் தொடர்ந்து 3 மாதமாக குறைந்தது. ஜூன்  1 அன்று  தமிழகத்தில் மானியமில்லா வீட்டு எரிவாயு சிலிண்டர் விலை ரூ.37 அதிகரிக்கப்பட்டுள்ளது. சென்னையில் மே மாதத்தில் ரூ.569.50 ஆக இருந்த சிலிண்டர் விலை தற்போது ரூ.606.50 ஆக குறைந்துள்ளது. இந்த விலை ஏற்றம் மானிய விலை எரிவாயு சிலிண்டர் விற்பனையில் தாக்கம் ஏற்படுத்தாது என எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

;