tamilnadu

img

தனிநபர் ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி போராட்டம்

திருக்கோவிலூர், ஜூலை 23- கள்ளக்குறிச்சி மாவட்  டம் ஜி.அரியூர் கிராமத்தில் உள்ள தலித் பகுதி குடி யிருப்பில் தனிநபர் ஆக்கிர மிப்பை அகற்றக் கோரி  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் திருக் கோவிலூர் வட்டாட்சியர் அலுவலகம் முன் காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது. ஜி.ஆரியூர் தலித் பகுதி  குடியிருப்பில் மேட்டுத் தெருவை அளந்து அத்து காட்டி தார் சாலை அமைத்து  தர வேண்டும், நடுத்தெரு வில் சிமெண்ட் சாலை அமைக்க வேண்டும், பேருந்து நிறுத்தம் அருகில் திம்மச்சூர் சாலையில் புதிய பாலம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட  கோரிக்கைகளை நிறை வேற்றக்கோரி இந்த காத்தி ருப்பு போராட்டம் நடை பெற்றது. சிபிஎம் கிளைச் செயலா ளர் டி.வீரன் தலைமையில்  நடைபெற்ற ஆர்ப்பாட்டத் தில் மாவட்டச் செயலாளர் டி.ஏழுமலை, செயற்குழு உறுப்பினர் எம்.செந்தில், மாவட்டக் குழு உறுப்பினர் கே.விஜயகுமார், வட்டச் செயலாளர் ஆர்.ராஜவேல் மற்றும் ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள், காவல்  துறையினர், கோரிக்கை களை நிறைவேற்றித் தருவ தாக உறுதியளித்தனர்.