tamilnadu

img

குடியிருப்புகளில் மழைநீர் புகும் அபாயம்

சென்னை, அக். 30 - திருவொற்றியூர்  மேற்கு பகுதியில் மழைநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் குடி யிருப்புகளில் மழைநீர் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. வட சென்னை திரு வொற்றியூர் மேற்குப் பகுதி யில் முல்லை, ஜெய்ஹிந்த், கார்கில், ஜோதி, சக்தி கணபதி  உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட நகர்கள் உள்ளன. இதில் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.  இப்பகுதியில் உள்ள மழைநீர் கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மழைக்காலங்க ளில் சாலையில் கழிவு நீர் தேங்கி நிற்கின்றன. மேலும்  குடியிருப்புகளில் மழைநீர் புகுந்து விடுகின்றன. இது குறித்து பொதுமக்கள் தொடர்ந்து புகார் கூறிய தைத் தொடர்ந்து, மாநக ராட்சி துணை ஆணையாளர் செப்டம்பர் 20 ஆம் தேதி ஜோதி நகரில் உள்ள கால்வாய்களை பார்வை யிட்டுச் சென்றார். அதிகாரி பார்வையிட்டதோடு சரி. அதன் பிறகு எந்தவித நடவடிக்கையும் எடுக்க வில்லை என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.   தற்போது பெய்து வரும் மழையால், ஜோதி, கலைஞர், எர்ணாவூர்  உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் தேங்கி நிற்கிறது. மேலும் கழிவுநீர் வீடுகளில் புகுந்துள்ளது. இது குறித்து சிபிஎம் பகுதிச் செயலாளர்  எஸ்.கதிர்வேல் கூறுகையில், ‘மழைக்காலத்தில் மட்டும் தற்காலிகமாக கால்வாயை தூர்வாரி,  மோட்டார் வைத்து தண்ணீர் அகற்று வது என்பது நிரந்தர தீர்வா காது. எனவே கழிவுநீர் மற்றும் மழைநீர் உடனுக்குடன் வெளியேற  நிரந்தர தீர்வு காண வேண்டும். மேலும் தற்போது ஏற்பட்டுள்ள அடைப்பை சரி செய்ய மண்டல அதிகாரி கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.