tamilnadu

img

ஓய்வுபெற்ற 600 பேருக்கு இன்னும் பணப்பலன் வழங்கப்படவில்லை

சென்னை, மே 31-ஓய்வு பெறும் நாளன்றே அனைத் துப் பணப்பலன்களையும் வழங்க வலியுறுத்தி வெள்ளியன்று (மே 31) பல்லவன் இல்லம் முன்பு ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.தமிழக அரசுக்கு சொந்தமான 8 போக்குவரத்துக் கழகங்கள் உள்ளனர். இவற்றில் பணியாற்றி 70 ஆயிரம் பேர் ஓய்வு பெற்றுள்ளனர். குறிப்பாக, சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தில் உள்ள ஓய்வூதியர்களுக்கு 2015-19 வரை பஞ்சப்படி உயர்வை வழங்காமல் உள்ளனர். 2018  மார்ச் மாதத்திற்கு பிறகு பணிக் கொடை, ஒப்படைப்பு ஓய்வூதியம், விடுப்பு சம்பளம்  போன்றவற்றை வழங்காமல் உள்ளனர். 2016 டிசம்பர் மாதத்திற்கு பிறகு சமூக பாதுகாப்பு நிதியை தராமல் உள்ளனர்.இந்நிலையில், ஓய்வு பெறும் நாளன்றே அனைத்து பணப்பலன்களையும் வழங்க வேண்டும். பஞ்சப் படி உயர்வை அரசு மற்றும் மின் வாரிய ஓய்வூதியர்களுக்கு வழங்குதுபோல், போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்களுக்கும் வழங்க வேண்டும்.போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு ஓய்வூதியத் தொகையை பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்ய வேண் டும், 2003க்கு பிறகு பணியில் சேர்ந்தவர்களை பழைய பென்சன் திட்டத்தில் இணைக்க வேண்டும், அரசு ஊழியர்களுக்கு உள்ளதுபோல் மருத்துவக் காப்பீடு திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பில் இந்தப் போராட்டம் நடைபெற்றது.இப்போராட்டத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அரசாங்க போக்குவரத்து ஊழியர் சங்க பொதுச் செயலாளர் பி.பாலகிருஷ்ணன், 2018 ஏப்ரல் மாதம் முதல் 2019 மே வரை 600 பேர் ஓய்வு பெற்றுள்ளனர். ஒருவருக்கு கூட ஓய்வுக்கால பணப்பலன் களை வழங்கப்படவில்லை. 8500 கோடி ரூபாய் முறைகேடாக செலவு செய்துள்ளனர். நீதிமன்றம் 8 வார கால அவகாசம் அளித்து வழங்கிய தீர்ப்பையும் செயல்படுத்த மறுக்கின்றனர். நீதிபதிகள் தாமாக முன்வந்து போக்குவரத்து துறை மீது வழக்குப் பதிவு செய்து உத்தரவிட வேண்டும்” என்றார்.இந்தப்போராட்டத்திற்கு சென்னை மாநகர போக்குவரத்து கிளைத் தலைவர் எம்.நீலமேகம் தலைமை தாங்கினார். மாநில அமைப் பாளர் ஏ.ரைமண்ட், கிளைச்செயலாளர் கே.வீரராகவன், பொருளாளர் ஏ.முத்துக்குமார், குணசேகரன் உள்ளிட்டோர் பேசினர்.