சென்னை,டிச.20- தமிழ்நாட்டில் மழை வெள்ள பாதிப்பை பிரதமர் ஆய்வு செய்ய வேண்டும் என விடுதலை சிறுத்தை கள் கட்சித் தலைவர் தொல். திரு மாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா வுக்கு அவர் அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:
சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார மாவட்டங்கள் அண்மை யில் பெய்த மழை வெள்ளத்தால் கடு மையாக பாதிக்கப்பட்டது. தென் மாவட்டங்களான தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் முன்னெப்போதும் இல்லாத வகையில் மழைப்பொழிவை எதிர்கொண்டுள்ளது.
எனவே, அவசர பேரிடர் நிவா ரணம் தேவைப்படுகிறது. ஒன்றிய அரசின் உடனடி தலையீடும் மீட்பு பணிகளுக்காக ஆயுதப் படைகள் மற்றும் என்டிஆர்எப் பணியாளர்களை அனுப்புவதும் உடனடி தேவையாக இருக்கிறது.
இதற்கிடையே மீட்பு பணி களுக்கு ஏதுவாக இடைக்கால நிவாரண நிதியை உடனடியாக வழங்க வேண்டும். நிலைமையின் தீவிரத்தை கருத்தில் கொண்டு அதை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும்.
மேலும், பிரதமர் அல்லது உள்துறை அமைச்சர் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று சேத மதிப்பீடுகளை செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன். உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து விரிவான நிவாரண நடவடிக்கை களை ஒருங்கிணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில் உடனடி யாக கவனம் செலுத்துவது மிகவும் அவசியம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.