tamilnadu

img

ஒரு கிலோ மல்லி ரூ.3 ஆயிரம்: பூக்கள் விலை கிடுகிடு உயர்வு

சென்னை:
கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்களின் விலை கடுமையாக உயர்ந்து காணப்படுகிறது. ஒரு கிலோ மல்லி ரூ.3 ஆயிரம் வரை விற்கப்படுகிறது.கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்களின் விலை கடுமையாக உயர்ந்து காணப்படுகிறது. ஒரு கிலோ மல்லி ரூ.3 ஆயிரம் வரை விற்கப்படுகிறது.  பூக்கள் விலை உயர்வு காரணமாக பூ மார்க்கெட்டில் கூட்டம் குறைந்துள்ளது. விவரம் வருமாறு:-

மல்லிப்பூ ரூ.3ஆயிரம், சாமந்தி - ரூ.100, பன்னீர் ரோஸ் - ரூ.100, சாக்லேட் ரோஸ் - ரூ.150, சிகப்பு செண்டு - ரூ.20. கனகாம்பரம் - ரூ.700, ஜாதி- ரூ.1200, முல்லை - ரூ.1500, சம்பங்கி -ரூ.100.திண்டுக்கல், திருச்சி, திருவள்ளூர் மற்றும் ஆந்திரா, கர்நாடக மாநிலங்களிலிருந்து பூக்கள் கோயம்பேடு சந்தைக்கு தினசரி விற்பனைக்கு வருகிறது.பனி சீசன் காரணமாக பூக்கள் வரத்து மூன்றில் ஒரு பங்காக குறைந்து உள்ளது. சாமந்தி தவிரமற்ற பூக்கள் வரத்து குறைவு. இதன் காரணமாக பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. மல்லி பூ தற்போது கிலோகணக்கில் மட்டுமே கோயம்பேடு சந்தைக்கு வருவதால் 2 நாட்களுக்கு முன்பு ரூ. 2ஆயிரம் வரை விற்ற மல்லி இன்று ரூ. 3ஆயிரம் வரை விற்கப்படுகிறது. அடுத்த மாதம் முதல் வழக்கம் போல வரத்து அதிகரித்து விலை குறையும் என்று வியாபாரிகள் கூறுகின்றனர்.

;