tamilnadu

தங்கப் பத்திரத்தின் விலை கிராமுக்கு ரூ.3,196ஆக நிர்ணயம்

சென்னை,ஜூன் 2-மத்திய அரசு,வெளியிடவுள்ள தங்கப் பத்திரங்களுக்கான விலையை கிராமுக்கு ரூ.3,196-ஆக நிர்ணயம் செய்துள்ளது.மத்திய அரசு வெளியிடும் தங்கப் பத்திரங்கள் விற்பனை வரும்திங்கள்கிழமை (ஜன.3) தொடங்கஉள்ளது. தற்போது வெளியிடப்படவுள்ள தங்கப் பத்திரங்களுக்கான விலை கிராமுக்கு ரூ.3,196-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தங்கப் பத்திரங்களை வாங்கஆன்லைன் மூலம் விண்ணப்பித்துபணம் செலுத்தும் வாடிக்கையாளர்களுக்கு வெளியீட்டு விலையிலிருந்து ரூ.50 தள்ளுபடி அளிக்க ரிசர்வ் வங்கியுடன் ஆலோசித்து மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. இதையடுத்து, இந்த வகை முதலீட்டாளர்களுக்கு தங்கப் பத்திரம் கிராமுக்கு ரூ.3,146- விலையில் வழங்கப்படும். நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டுக்கான தங்கப் பத்திர விற்பனைக்கான அட்டவணையை ரிசர்வ் வங்கி கடந்த வியாழக்கிழமை வெளியிட்டது. அதில், நடப்பாண்டு ஜூன் முதல் செப்டம்பர் வரை ஒவ்வொரு மாதமும் தங்கப் பத்திர விற்பனை நடைபெறும் என்று ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.தனி நபர் ஒருவர் நிதியாண்டுக்குஅதிகபட்சம் 500 கிராம் வரையிலான தங்கப் பத்திரங்களில் முதலீடு செய்யலாம். வங்கிகள், பங்கு விற்பனை மையங்கள், அஞ்சல் அலுவலகங்கள், மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகள் ஆகியவற்றின் மூலமாக இந்த தங்க பத்திர விற்பனை நடைபெற உள்ளது.