சென்னை,செப்.23 தாயின் கர்ப்பப்பையில் 22 வாரங்கள் மட்டுமே இருந்து முன்கூட்டியே பிறந்த, இந்தியாவின் மிகவும் இளம் குழந்தை ஒன்று, சென்னை சைதாப்பேட்டை சின்னமலையில் உள்ள ரெயின்போ குழந்தைகள் மருத்துவமனையில் காப்பாற்றப்பட்டது. சென்னையை சேர்ந்த கீதா அறிவழகன் கருவுற்றதி லிருந்து 22 வாரம் 510 கிராம் எடையுடன் குறைபிரவ சத்தில் ஒரு ஆண் ஒரு பெண் குழந்தையை பெற்றெடு த்தார். இரண்டும் ஆபத்தான நிலையில் இருந்ததால் உடனே உயர்சிகிச்சை அளித்தால் மட்டுமே காப்பாற்ற முடியும் என்று மருத்துவர்கள் கூறிவிட்டனர். பெண் குழந்தை அடுத்தசில நாட்களில் உயிரிழந்த நிலையில் ஆண் குழந்தைக்கு சிகிச்சை அளித்தாலும் உயிர்பிழைப்பதற்கு உத்தர வாதம் இல்லை என்று மருத்துவர்கள் கூறிவிட்டனர். பெற்றோர் மன உறுதியுடன் இருந்ததாலும் குழந்தையும் போராடும் குணத்தை கொண்டிருந்ததாலும் டாக்டர் ராகுல் யாதவ் தலை மையிலான ரெயின்போ மருத்துவமனையின் பச்சிளம் குழந்தைகளு க்கான சிறப்பு மருத்துவர்கள் குழு வெற்றிகரமாக 3 மாதங்களாக சிகிச்சை அளித்து காப்பாற்றினர். கருவுற்றதில் இருந்து 22 வாரங்களில் பிறந்த இந்த குழந்தை சுவாசிக்க அதிகமாக சிரமப்பட்டது. பல வீனமான எலும்புகள், மருத்துவமனைக்கு வந்த போது 150 கிராம் குறைந்து 350 கிராம் என்ற மிகவும் குறைந்த எடை என சவாலான நிலையில் மருத்து வர்கள் நம்பிக்கையுடன் சிகிக்சை அளித்து காப்பாற்றியதாக டாக்டர் சோபனா ராஜேந்திரன் கூறி னார்.