“பெருமுதலாளிகள் கடனில் கடந்த 10 ஆண்டுகளில் 17.46 லட்சம் கோடிகளை தள்ளுபடி செய்த வங்கிகள். குறைந்தபட்ச இருப்பு இல்லையென கடந்த 5 ஆண்டுகளில் ஏழை - எளிய மக்களின் இரத்தத்தை உறிஞ்சி சேர்த்த தொகை 8 ஆயிரத்து 500 கோடிகளாம். அதானி ஏர்போர்ட் பராமரிப்பிற்கு வங்கி கடன் கொடுக்குமாம். வாங்கிய கடனை வங்கி தள்ளுபடி செய்யுமாம். அதேவங்கி அதே அதானியோடு விவசாயிகளுக்கு கடன் வழங்க ஒப்பந்தம் போடுமாம்! மோசடிக்காக இன்னொரு மோடி திட்டம்; ஓடப்பர்களின் பொறுமையே; ஒட்டச்சுரண்டிகளின் வலிமை!” என்று சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர் க. கனகராஜ் குறிப்பிட்டுள்ளார்.