tamilnadu

img

ஊராட்சிமன்ற தலைவர் உயிருக்கு பாதுகாப்பில்லை: மு.க.ஸ்டாலின்

சென்னை:
கிருஷ்ணாபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் சரிதாவுக்கு சட்டப் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

கோவை மாவட்டம், கிருஷ்ணாபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் சரிதா, திமுகவைச் சார்ந்த இவர் கடந்த உள்ளாட்சி தேர்தலில்  போட்டியிட்டு வெற்றிபெற்றார். ஆனால், தொடர்ச்சியாக இவரை பணி செய்யவிடாமல் சிலர் மிரட்டியதாகக் கூறப் படுகிறது. இது தொடர்பாக கோயம்புத்தூர் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் ஒன்றை சரிதா அளித் துள்ளார்.அந்த புகாரில், நான் பட்டியலின வகுப்பைச் சேர்ந்தவர் என்பதால் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் அமரவிடாமல் பாலசுப்பிரமணியம் என்பவர் மிரட்டுவதாக தெரிவித்துள்ளார்.ஊராட்சி எல்லையிலுள்ள தகவல் பலகை, ஊராட்சி அலுவலகம் ஆகிய இடங்களில் “ஊராட்சி தலைவர் சரிதா” என தனது பெயரை எழுதவிடாமல் தடுப்பதாகவும் தெரிவித்துள் ளார்.இதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “கோயம்புத்தூர் மாவட்டம் கிருஷ்ணாபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் கே.சரிதா சாதி ரீதியாக அவமானப்படுத்தப்பட்டதோடு, கொலை மிரட்டலுக்கும் உள்ளாகிருக்கிறார். தன்னை அவமானப் படுத்துபவர்கள் யார் என்று குறிப்பிட்டு காவல்துறையில் புகார் கொடுத் துள்ளார்.

ஊராட்சி மன்றத் தலைவரது உயிருக்கே இந்த ஆட்சியில் பாதுகாப்பு இல்லையா? சரிதாவுக்கு சட்டப் பாதுகாப்பு தர வேண்டும். அவரை மிரட்டுவோர் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்”எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

;