ஒமைக்ரான் கொரோனா வகை அச்சுறுத்தல் நிலவி வரும் நிலையில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் இறையன்பு இன்று ஆலோசனை நடத்தவுள்ளார்.
தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டுள்ள ஒமைக்ரான் வகை கொரோனா தொற்றானது போட்ஸ்வானா, பெல்ஜியம், ஹாங்காங், இஸ்ரேல் ஆகிய நாடுகளில் பரவு வருகின்றது.
இதையடுத்து அனைத்து மாநிலங்களிலும் பரிசோதனை அதிகரிக்கவும், விமான நிலையங்களில் தீவிர கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ளவும், தடுப்பூசி செலுத்தும் பணியை விரைவுபடுத்தவும் ஒன்றிய அரசு அறிவிறுத்தியுள்ளது. மேலும், டிசம்பர் 1ம் தேதி முதல் விமான நிலையத்திலேயே அனைவருக்கும் ஆர்.டி-பி.சி.ஆர் பரிசோதனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி மூலம் இன்று பிற்பகல் தலைமைச் செயலாளர் இறையன்பு ஆலோசனை நடத்தவுள்ளார்.