tamilnadu

கொத்தவால் சாவடி மார்க்கெட் ஒரு வாரம் மூடப்படுகிறது

சென்னை, ஜூன் 7- கொரோனா வைரஸ் தொற்றின் பரவலை தடுக்கும் விதமாக கொத்தவால் சாவடி மார்க்கெட் ஒரு வாரம் மூடப்படுவதாக வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. சென்னையில் கோயம்போடு சந்தைக்குப் பிறகு பெரிய சந்தையாக கொத்தவால் சாவடி உள்ளது. இங்கு காய்கறிகள், மளிகை பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளும் ஆயிரத்திற்கு மேல் உள்ளன. ராயபுரம் மண்டலத்தின் கீழ் கொத்தவால் சாவடி சந்தை உள்ளது. சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் அதிகப்பட்சமாக ராயபுரம் மண்டலத்தில்தான் பாதிப்பு உள்ளது.  ஏற்கனவே கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக ஒரு வாரம் கடைகள் அடைக்கப்பட்டன. அதன்பின் ஒருநாள்விட்டு ஒருநாள் என்ற கணக்கில் கடைகள் திறக்கப்பட்டன. கடந்த ஏழு நாட்களாக கொரோனா வைரஸ் தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மீண்டும் ஒருவாரம் மார்க்கெட் மூடப்படுவதாக கொத்தவால் சாவடி சந்தை வியாபாரிகள் சங்கங்கள் அறிவித்துள்ளன.