சென்னை, ஆக. 3 - தருமபுரி அருகே இலக்கியம் பட்டியில், முகமது ஆஷிக் படு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அறிக்கை ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார்.
அதில், “தருமபுரி அருகே இலக்கியம்பட்டியில் தொப்பி வாப்பா பிரியாணி உணவகத்தில் ஒரு சமூகவிரோதக் கும்பல் நுழைந்து அங்கே பணியாற்றிக் கொண்டிருந்த முகமது ஆஷிக் என்பவரைக் கொடூரமாகத் தாக்கிப் படுகொலை செய்துள் ளது. இந்தக் காட்டுமிராண்டித் தனத்தை விடுதலைச் சிறுத்தை கள் கட்சி மிக வன்மையாகக் கண் டிக்கிறது. இந்தப் படுகொலை யைத் திட்டமிட்டவர்கள், கொலை யாளிகளை ஏவியவர்கள் உள்ளி ட்ட அனைவரையும் கைதுசெய்து குண்டர் தடுப்புக் காவலில் சிறைப்படுத்த வேண்டும்.
ஆதிக்க சாதியவாதக் கும்ப லின் இந்த ‘பித்து நிலை உள வியல்’ தற்போது தலித்துகளி டையேயும் பரவுவது வேதனைக் குரியது. இப்போக்கைத் தடுத்து நிறுத்த தமிழ்நாடு அரசு இதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டுகிறேன்.
இதுபோன்ற ஆணவக் கொலைகளைத் தடுத்திட தனிச் சட்டம் தேவை என்பதை மீண்டும் தமிழ்நாடு அரசு மற்றும் இந்திய ஒன்றிய அரசு ஆகியவற்றுக்குச் சுட்டிக் காட்ட விரும்புகிறேன். பாதிக்கப்பட்ட குடும்பத்தின ருக்கு ரூபாய் 25 இலட்சம் இழப்பீடு வழங்குவதுடன், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வாய்ப்பளிக்கவும் வேண்டுமென தமிழ்நாடு அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்” என குறிப்பிட்டுள் ளார்.