tamilnadu

சிறுவாகனங்களின் மிகப்பெரிய சந்தையாக திகழும் சென்னை

சென்னை,மே 27-சரக்கு போக்குவரத்துக்கு பயன்படும் சிறு வாகனங்களின் மிகப்பெரிய சந்தையாகசென்னை திகழ்கிறது என்று டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் வர்த்தக வாகனபிரிவு தலைவர் கிரிஷ் வாக் கூறினார்.சென்னையில்  டாடா இன்ட்ரா  என்றஇந்தியாவின் முதல் காம்பேக்ட் டிரக்கைஅறிமுகம் செய்த பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தென்னிந்தியாவில் சரக்குபோக்குவரத்து அதிகமாக உள்ளது. மேலும் தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் சிறிய சரக்கு போக்குவரத்து வாகனங்களுக்கு நுகர்வு மிகமிக அதிகமாக உள்ளது.புதிய இன்ட்ரா வாகனத்தின் விலை ரூ.5.35 லட்சம். சிறு வர்த்தகத்திற்கான வாகன சந்தையில் டாடா மோட்டார் தொடர்ந்து வளர்ந்து வருகிறது.புதிய வாகனம் பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளதால் சந்தையில் நல்ல வரவேற்பை பெறும்.கார் போன்ற வடிவமைப்பில் உருவாக்கப்பட்ட கேபின், ஸ்டீயரிங் வசதி, குறைவான சப்தம் மற்றும் வசதியான இருக்கைகள், களைப்பில்லாமல் நீண்ட தூரம் வெவ்வெறு நகரங்களுக்கிடையே சவாரி மேற்கொள்ள  இந்த வாகனம் பயன்படும். இன்ட்ரா ஏ10,  இன்ட்ரா ஏ 20 என இரு மாடல்களில் இந்த புதிய வாகனம்கிடைக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.