tamilnadu

தோல்வி பயத்தால் உள்ளாட்சி தேர்தலை தள்ளிப்போட அரசாணை வெளியீடு திமுக குற்றச்சாட்டு

சென்னை,மே 11-தமிழகத்தில் உடனடியாக உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என்று சமீபத்தில் தி.மு.க. சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு கடந்த மாதம் விசாரணைக்கு வந்தபோது 3 மாதத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.கடந்த 4-ந்தேதி இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மாநில தேர்தல் ஆணையத்தின் சார்பில் பதில் அளித்து பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.அதில் வாக்காளர் பட்டியல் முழுமையாக தயார் செய்ய வேண்டியுள்ளது. இந்த நடைமுறை முடிந்த பிறகே உள்ளாட்சி தேர்தலை நடத்த முடியும் என்றும் தற்போது மக்களவைத் தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் உள்ளதால் வாக்காளர் பட்டியல் தயாரிப்பு முழுமை பெறவில்லை. எனவே உடனே உள்ளாட்சி தேர்தலை நடத்த முடியாது என்று கூறியிருந்தது.இந்த நிலையில் வெள்ளிக்கிழமை உள் ளாட்சி தேர்தலுக்கான நடவடிக்கைகளை தமிழக அரசு தொடங்கியுள்ளது அறிவித்திருந்தது. வாக்காளர் பட்டியல் தயாரிப்புக்கான வழிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது.ஏற்கனவே, மக்களவைத் தேர்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்காளர் பட்டியல் சட்டமன்றம் வாரியாக தயார் நிலையில் உள்ளதால் அதை வார்டு வாரியாக பிரிக்கும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது.இதுகுறித்து உள்ளாட்சி துறையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:-வாக்காளர் பட்டியலை பிரித்து சரிபார்க்கும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. இந்த பணிகள் முடிந்ததும் உள்ளாட்சி தேர்தலை நடத்த தயாராகிவிடுவோம். மக்களவைத் தேர்தல் மற்றும் 22 சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் ஓட்டு எண்ணிக்கை வருகிற 23ஆம் தேதி நடைபெறுகிறது. அதன்பிறகு அடுத்த மாதம் சட்டசபை கூடும். எனவே ஜூன் மாதம் உள்ளாட்சி தேர்தலை நடத்த முடியாது.மானியக்கோரிக்கை மீதான விவாதம் 25 நாட்கள் நடைபெறும் என்பதால் ஜூலை மாதம் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான பணிகள் தொடங்கிவிடும். எனவே, ஆகஸ்டு மாதம் உள்ளாட்சி தேர்தல் நடைபெற வாய்ப்பு உள்ளதுஇவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார்.

;