tamilnadu

உள்ளாட்சி தேர்தல் ஏற்பாடு தீவிரம்

சென்னை, ஜுன் 4-தமிழகத்தில் உள்ளாட்சி  தேர்தலுக்கானபணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்படுகின்றன. சென்னை மாநக ராட்சியில் உள்ள 15 மண்டலஅலுவலர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டம் நடத்திய சென்னைமாநகராட்சி ஆணையர் பிரகாஷ்,  வாக்குச் சாவடிகள் குறித்து அறிக்கை பெற்றுள்ளார். அதன்படி உள்ளாட்சி தேர்தலுக்காக சென்னைமாநகராட்சியில் உள்ள அனைத்து மண்டலங் களுக்கும் சேர்த்து 5800 வாக்குச்சாவடிகள் அமைக்கவுள்ளனர்.மேலும் வாக்காளர் பட்டியலை பொருத்த வரையில், மக்களவைத் தேர்தலுக்கான சென்னை வாக்காளர் பட்டியலை வைத்துக்கொண்டு புதிய வாக்காளர்களையும் இணைக்கும் நோக்கில் சிறப்பு முகாம்கள் நடத்தவும் மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.