tamilnadu

img

73 ஆண்டுகளில் இல்லாத வெயில் உதகை 84.4 டிகிரி

சென்னை, ஏப். 29 - ‘மலைகளின் அரசி’ என்று அழைக்கப்படும் ஊட்டி (உதகை)யில் இதுவரை இல்லாத வகையில் திக்ஙளன்று 84.4 டிகிரி அளவிற்கு வெப்பநிலை பதிவாகி யுள்ளது.  இது இயல்பை விட 42.76 டிகிரி அதிகம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

இரண்டாவது நாளாக தொடர்ந்து 84 டிகிரிக்கும் அதிகமாக வெப்பம் பதி வாகியுள்ளது; ஞாயிறன்று 84.2 டிகிரியாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் தற்போது கோடைக்காலம் தான் என்றாலும், இயல்பை விட 5 டிகிரி வரை அதிகமான வெயில் சுட்டெரித்து வருகிறது. பல மாவட்டங்களில் வெப்ப அலை வீசி வருகிறது. ஈரோடு, தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் வெப்பநிலை 108 டிகிரியை தொட்டுள்ளது. இந்த வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து தற்காத்துக் கொள்ள பெரியவர்கள் முதல்  குழந்தைகள் வரை குளு, குளு இடங் களை தேடி செல்கின்றனர். குறிப்பாக ஊட்டி, கொடைக்கானல் போன்ற சுற்றுலா தலங்களுக்கு குடும்பத்தோடு படை யெடுத்து வருகின்றனர்.

ஆனால் குளு குளுவென்று இருக்கும் எனக் கருதி வந்த ஊட்டியிலும் வெயில் சுட்டெரித்தது, சுற்றுலா பயணிகளை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. ஊட்டி யில் ஞாயிற்றுக்கிழமையன்று கடந்த 73 ஆண்டுகளில் இல்லாத வகையில் 29 டிகிரி செல்சியஸ் (84.4 டிகிரி பாரன்ஹீட்) வெப்பம் பதிவாகியுள்ளது. கடந்த 1951-ஆம் ஆண்டில் இருந்து இப்போது வரை பதிவான வெப்ப நிலையில் இதுதான் மிக அதிகம் என்று கூறப்படுகிறது.

அந்த வகையில் ஊட்டியில் ஏப். 28 அன்று 84.4 டிகிரி பாரன்ஹீட் (29 டிகிரி செல்சியஸ்) வெப்பம் பதிவானது. அதா வது இயல்பை விட 10 டிகிரி பாரன்ஹீட் (5.4 டிகிரி செல்சியஸ்) அதிகரித்துள்ளது. இதற்கு முன்பு 1969, 1986, 1993, 1995, 1996 ஆகிய ஆண்டுகளில் 80.6 டிகிரி முதல் 83.3 டிகிரி வரையில் வெப்பம் பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.