திருவண்ணாமலை, ஜன.24- திருவண்ணாமலையில் நடைபெற்ற பெண்கள் சாதனை கண்காட்சி நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியரின் முகாம் அலுவலகத்தி லிருந்து, மாவட்ட ஆட்சியருடன், கண்களைக் கட்டிக்கொண்டு மாணவி சைக்கிள் ஓட்டிய நிகழ்ச்சி பார்வையாளர்களை, வெகுவாக கவர்ந்தது. திருவண்ணாமலை மாவட்டம் முனுகப் பட்டு கிராமத்தில் நெசவு தொழில் செய்து வரும் தொழிலாளி குமரன், இவரது மகள் சுருதி (12). முனுகப்பட்டு அரசுப்பள்ளியில் சுருதி ஆறாம் வகுப்பு படித்து வருகிறார். மாணவி சுருதி தனது இரண்டு கண்களை யும் கட்டிக்கொண்டு மிதி வண்டி ஓட்டு வது, வரைபடத்திற்கு வண்ணம் தீட்டுவது, நிறங்களை கூறுவது, சதுரங்கம் விளையாடு வது, உருவங்களை அடையாளம் காண்பது, பின்தொடர்வது உள்ளிட்ட பல்வேறு திறன் களை பெற்றுள்ளார். மாவட்ட ஆட்சியர் க.சு. கந்தசாமி, மாணவி சுருதியின் திறமைகளைக் கண்டு பாராட்டு தெரிவித்தார்.