தென்பெண்ணை ஆற்றின் தரைப்பாலத்தை
மேம்பாலமாக உயர்த்த வேண்டும்
பெஞ்சல் புயலால் விழுப்புரம் மாவட்டம், அரகண்ட நல்லூர் அருகே முற்றிலும் சேத மடைந்த தென்பெண்ணை ஆற்றின் தரை பாலத்தை மேம்பாலமாக கட்டித்தர வலி யுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தொடர் முழக்க போராட்டம் நடைபெற்றது. பெஞ்சால் புயல், மழையால் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.தொடர்ந்து கொட்டி தீர்த்த மழையால் சாத்தனூர் அணை நிரம்பியதால் திறக்கப்பட்ட உபரி நீர் வெளியேற வழியில்லாமல் திசைமாறி விழுப்புரம் மாவட்டத்தில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. இதனால், தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே மக்களின் பயன்பாட்டில் இருந்து வந்த பழமையான தரைப் பாலம் முற்றிலும் பழுதடைந்து போக்கு வரத்து தடைப்பட்டுள்ளது. எனவே, இந்த தரைப்பாலத்தை முற்றிலமாக இடித்துவிட்டு திருக்கோவிலூர்-அர கண்டநல்லூர் ரயில்வே கேட் அருகில் புதிதாக மேம்பாலம் கட்டிக் கொடுக்க வேண்டும். மேலும், வெள்ளத்தால் பாதிக்கப் பட்ட கூட்டுக் குடிநீர் திட்டங்களான அரகண்டநல்லூர் பேரூராட்சி குடிநீர் திட்டம், வீரபாண்டி ஒட்டம் பட்டு குடிநீர் திட்டம், அனந்தபுரம் கண்டாச்சிபுரம் கூட்டுக் குடிநீர் திட்டம், மனம்பூண்டி குடிநீர் திட்டங்களை போர்க்கள அடிப்படையில் முழுமை யாக சீரமைத்து கொடுக்க வேண்டும். அனைத்து விரைவு ரயில்க ளும் அரகண்டநல்லூரில் நின்று செல்வதை உறுதிப்படுத்த வேண்டும், திருவண்ணாமலை, திருக்கோவிலூர், விழுப்புரம், தாம்பரம், ரயில்வே வழித்தடத்தில் தினசரி ரயிலை மீண்டும் இயக்க வேண்டும். புதுச்சேரி- விழுப்புரம்- திருக்கோவிலூர்- திருவண்ணா மலை காட்பாடி- ஜோலார்பேட்டை- பெங்களூர், ரயில் வழித்தடத்தில் புதிய தாக ரயிலை இயக்க வேண்டும். விழுப்புரம்- காட்பாடி ரயில் பாதை களை இருவழிப் பாதையாக வரும் காலத்தில் மாற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மணம்பூண்டியில் வெள்ளிக்கிழமை (பிப்.28) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டச் செயலாளர் எஸ்.கணபதி தலைமையில் தொடர் முழுக்க போராட்டம் நடைபெற்றது. அரகண்டநல்லூர் நகரச் செயலாளர் ஏ.ஆர்.கே தமிழ்ச்செல்வன் முன்னிலை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் சு.வேல்மாறன் போராட்டத்தை துவக்கி வைத்து பேசினார். சிபிஎம் முன்னாள் எம்எல்ஏ ஆர்.ராம மூர்த்தி, மாவட்டச் செயலாளர் என். சுப்பிரமணியன் ஆகியோர் கோரிக்கை களை வலியுறுத்தி பேசினார். சிபிஎம் மாவட்டக் குழு உறுப்பினர்கள் எம்.முத்துவேல், ஆர்.தாண்டவராயன், சிஐடியு மாநில குழு உறுப்பினர் வி.உதயகுமார், மூத்த தலைவர் பி.விருத்தகிரி, கள்ளக்குறிச்சி மாவட்ட குழு உறுப்பினர் கே.விஜய குமார், திருக்கோவிலூர் வட்டச் செய லாளர் எம்.ஏழுமலை, எப்.டேவிட், பி.முருகன் ஏவி.கண்ணன் என்.எஸ்.ராஜா, எஸ்.சையத்ஜகாங்கீர், எ.ஏழு மலை, வி.உமா மகேஸ்வரி வி.தன லட்சுமி, டீ.குப்பன், எம்.பழனி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அதிமுக, சிபிஐ, காங்கிரஸ், பாட்டாளி மக்கள் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, தமிழக வாழ் உரிமை கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் ஏ.ஆர்.வாசிம்ராஜா, பாவாடை, ஆ.சௌரிராஜன், ஏ.வி.சரவணன், ஆ.ராஜா, டி.எஸ்.பழனியப்பா, எம்.தனபால் ராஜ், எம்.இளங்கோவன், பால.சக்தி, தங்க.ஜோதி, சுவிஜி.சரவணகுமார், டிஜி.கணேஷ், ரா.தமிழ்ச்செல்வன், எஸ்.சிராஜுதீன், எஸ்.ரியாசுதீன், எம்.மன்சூர் அலி , கே.வெங்கடேசன், எஸ்.வெங்கடேசன், ஜி.ஆர்.பரணி பாலாஜி, எம்.செந்தில்குமார், பி.கார்த்தி கேயன், பி.மும்மூர்த்தி, எம் ரமேஷ் உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்து பேசினர்.