tamilnadu

img

ரயில் பயணத்தின் போது பெண் பயணியின் கை விரல் துண்டானது

சிதம்பரம், ஜன. 13- சென்னை மேடவாக்கத்தைச் சேர்ந்த வினோத் என்பவரின் மனைவி சரண்யா (35). இவர் தனது 5 வயது மகளுடன் மயிலாடுதுறையில் உள்ள தாய் வீட்டிற்கு செல்வதற்காக திங்கட்கிழமை காலை சென்னை எக்மோரில் இருந்து சோழன் விரைவு ரயிலில் பயணம் செய்துள்ளார். அப்போது பெட்டியில் இருந்த இரும்பினாலான ஜன்னல் கதவு விழுந்து சரண்யாவின் இடது கையில் உள்ள நடு விரல் துண்டானது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த சக பயணிகள் தற்காலிகமாக துணியை வைத்து துண்டான விரலை கட்டியுள்ளனர். பின்னர் இதுகுறித்து அந்த ரயிலில் உள்ள பயணச்சீட்டு பரிசோதகர், ரயில்வே காவல்துறையினரிடம் முதலுதவிப் பெட்டி கொடுங்கள் என்று கேட்டபோது இல்லையென்று கூறியுள்ளார்கள். இதனைத் தொடர்ந்து இதுகுறித்து பயணிகள் சிதம்பரம் ரயில் நிலையத்திற்கு தகவல் கொடுத்ததின் பேரில் முதல் உதவி செய்யப்பட்டது. இதுகுறித்து சரண்யா மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் உள்ள அதிகாரியிடம் புகார் கூறிய போது, அவர் அலட்சியமான பதிலை கூறியுள்ளார். பின்னர் மயிலாடுதுறையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார். ரயிலில் பயணம் செய்தால் பாதுகாப்பு அதிகம் என பொதுமக்கள் ரயிலில் பயணம் செய்கிறார்கள். ஆனால் முதலுதவி பெட்டி கூட ரயிலில் இல்லாமல் இருப்பது வேதனையாக உள்ளது என்று பயணிகள் தெரிவித்தனர்.

;