உளுந்தூர்பேட்டை. நவ, 20- திருநாவலூர் ஒன்றியம் நல்லா ளக்குப்பத்தில் கடை துவங்கி இது வரை எட்டு பேரின் உயிரை பறித் துள்ள டாஸ்மாக் கடையை மூடக் கோரி நான்காம் கட்டப் போராட்ட மாக உளுந்தூர்பேட்டை வட்டாட்சி யர் அலுவலகம் முன்பு குடும்பத்து டன் குடியேறும் போராட்டம் அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் சார்பில் நடத்தப்பட்டது. இந்த டாஸ்மாக் கடையால் ஏழை-எளிய மக்களின் குடும்பங்களில் ஏரா ளமான பிரச்சனைகள் ஏற்பட்டதால் இக்கடையை உடனடியாக மூட வலியுறுத்தி விவசாயத் தொழிலா ளர்கள் சங்கம் சார்பில் மூன்று முறை போராட்டம் நடத்தப்பட்டது. அதில் இரண்டு முறை எழுத்து மூலமான உடன்பாடு ஏற்பட்டும் ஒப்பந்தப்படி கடையை மூடாமல் அரசு நிர்வாகம் மக்களை ஏமாற்றியது. மாவட்ட டாஸ்மாக் பொதுமேலா ளர் கையொப்பமிட்ட பின்னும் கடையை மூட வில்லை. இதனால் மேலும் ஆத்திரமடைந்த இப்பகுதி கிராம மக்கள் ஏற்கனவே போடப்பட்ட ஒப்பந்தப்படி உடனடி யாக கடையை மூடி அப்புறப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி நவம்பர் 20 ஆம் தேதி புதன்கிழமையன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சங்கத்தின் திருநாவலூர் கிழக்கு ஒன்றியத் தலைவர் ஏ.குடியரசு மணி தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டத் தலைவர் பி.சுப்பிர மணியன், செயலாளர் டி.எம். ஜெய் சங்கர், ஒன்றியச் செயலாளர் ஜி. தாமோதரன், பொருளாளர் ஏ.கே.முருகன் உள்ளிட்டோர் கண்டன உரை யாற்றினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாவட்டச் செயலாளர் டி.ஏழு மலை, செயற்குழு உறுப்பினர்கள் எம்.கே.பூவராகன், எம்.ஆறுமுகம், டி.எஸ்.மோகன், திருநாவலூர் கிழக்கு ஒன்றியச் செயலாளர் ஜெ. ஜெயக்குமார், உளுந்தூர்பேட்டை நகரச் செயலாளர் கேதங்கராசு, மாவட்டக்குழு உறுப்பினர் டி.வெங்க டேசன், மாதர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஏ.தேவி, வாலிபர் சங் கத்தின் மாவட்டத் தலைவர் எம்.கே. பழனி ஆகியோர் போராட்டத்தை வாழ்த்திப் பேசினர். போராட்டம் நடத்த தொடங்கிய திலிருந்தே காவல்துறையினர் போராட்டத்தின் வீரியத்தை குறைத்திட முயன்றனர். போராட்டப் பந்தலுக்கு பக்கத்தில் போலீஸ் வேனை நிறுத்தியும், முன்புறத்தில் பேரிகார்டுகளை அடுக்கியும் தடை களை ஏற்படுத்தினர். மேலும் மதியம் சமைத்து சாப்பிடுவதற்காக பாத்தி ரங்களை கொண்டுவந்து இறக்கிய போது அதனை இறக்கி சமையல் செய்திட தடை விதித்தனர். டாஸ்மாக் கடைகளுக்கும், குடிப்பவர்களுக் கும் பாதுகாப்பளிக்கும் காவல்துறை டாஸ்மாக் கடையை மூடுவதற்கான போராட்டத்திற்கு இடையூறு ஏற்ப டுத்தியது பொதுமக்களை முகம் சுளிக்க வைத்தது.