சொன்னது
2014 மக்களவைத் தேர்தலின்போது, மத்திய பட்ஜெட்டில், ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6 சதவீதத்தை கல்விக்கு ஒதுக்குவதன் மூலம் கல்விக்கு உயர் முன்னுரிமை வழங்கப்படும் என்று பாஜக வாக்குறுதி அளித்தது.
கல்வித் துறையை தனியார் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களுக்குத் திறந்து விடுவது போட்டியை ஊக்குவித்து கல்வியின் தரத்தை மேம்படுத்தும்.
அனைவரையும் உள்ளடக்கிய கல்வி மற்றும் பின்தங்கிய பிரிவுகளைச் சேர்ந்த குழந்தைகளை மேம்படுத்துவதற்கான திட்டங்களை அரசாங்கம் செயல்படுத்தி வருகிறது.
உயர்கல்வி நவீனமயமாக்கப்பட்டு உலகத் தரத்திற்கு கொண்டு வரப்படும்.
கடந்த 2014 முதல், நாள்தோறும், இரண்டு புதிய கல்லூரிகள் துவங்கப்படுகின்றன. உயர்கல்வியில் மாணவர் சேர்க்கை மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது - மோடி
தேசிய கல்விக் கொள்கை-2020 விரிவான வளர்ச்சி, இந்தியத்தன்மை மற்றும் கலாச்சார மறுமலர்ச்சிக்கு வழிவகுக்கும்.
உண்மை நடப்பு என்ன?
l மோடி ஆட்சியின் ஒரு தசாப்தத்தின் (2014-24) கசப்பான உண்மை என்ன
வென்றால், ஒன்றிய அரசின் கல்விக்கான சராசரி ஆண்டு செலவு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.41 சதவீதம் மட்டுமே, இது ஐக்கிய முற்போக்கு கூட்டணி
ஆட்சியின் (2004-14) சராசரியாக இருந்த 0.66 சதவீதத்தை விட குறைவு.
l அரசுப் பள்ளிகளை மூடுவதன் மூலமோ அல்லது இணைப்பதன் மூலமோ, மாணவர்கள் தனியார் பள்ளிகளில் சேர நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். பாஜக ஆளும் மாநிலங்களில், ‘சிராக்’ திட்டத்தின் கீழ், மாணவர்களிடம் சேர்க்கை கட்டணம் வசூலிக்கப்படுகிறது; தனியார் பள்ளிகளுக்கு மானியம் வழங்கப்படுகிறது. அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் இந்த வழியில் மாறும்போது, ஏழை மாணவர்கள் படிப்பை நிறுத்தும்போது, இந்த மானியம் நிறுத்தப்படும்.
l உயர்கல்வித் துறையை தனியாருக்குத் திறந்துவிட வேண்டும் என்ற வெறித்தனமான அவசர நிலை உருவாகியுள்ளது. மேலும் பெரும்பாலான புதிய உயர் கல்வி நிறுவனங்கள் தனியார் மூலம் நிர்வகிக்கப்படுகின்றன. அரசு நிதியுதவி பெறும் பல்கலைக்கழகங்களின் கட்டண உயர்வு காரணமாக, அங்கு இடங்கள் காலியாக உள்ளன. அதே நேரத்தில் மாணவர்கள் அதிக எண்ணிக்கையில் தனியார் பல்கலைக்கழகங்களை நாட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
l பள்ளி மற்றும் உயர்கல்வி மட்டங்களில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. ஆன்லைன் கல்வி, பயிற்சி மற்றும் டிஜிட்டல் மய
மாக்கலுக்கான உந்துதல் ஆகியவை, சமூகத்தின் பின்தங்கிய பிரிவினருக்கு கல்வி உரிமையைப் பெறுவதைத் தடுக்கும் ஒரு சதியே ஆகும்.
l பாஜக ஆளும் பெரும்பாலான மாநிலங்கள் எஸ்சி / எஸ்டி மற்றும் பிற ஒடுக்கப் பட்ட பிரிவினருக்கான கல்விஉதவித்தொகையை நிறுத்துகின்றன; அல்லது நியாயமற்ற முறையில் பணம் செலுத்துவதை தாமதப்படுத்துகின்றன.
l நீண்ட போராட்டத்திற்குப் பிறகு இயற்றப்பட்ட கல்வி உரிமைச் சட்டம் 2009 நடைமுறையில் பயனற்றுப் போயுள்ளது.
l சிறுபான்மை சமூக அமைப்புகளால் நடத்தப்படும் மதரஸாக்களில் மீண்டும் மீண் டும் தலையிட்டு அவற்றை அழிக்க முயற்சிக்கப்படுகிறது. அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் சிறுபான்மை அந்தஸ்து கூட கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது.
l ‘வேலைக்கான திறன்வளர்ப்பு’ என்ற பெயரில், விலையுயர்ந்த தனியார் பயிற்சி மையங்கள் செழித்து வருகின்றன, அவை மாணவர்கள் மீது அழுத்தத்தை அதிகரித்து வருகின்றன. மேலும் பதற்றம் நிறைந்த குழந்தைகள் தற்கொலைக்குத் தூண்டப்படுகின்றனர்.
l போதுமான வளங்களை ஒதுக்குவதற்கு பதிலாக, உயர் கல்வி நிறுவனங்கள் ‘சுயநிதி’ மாதிரியை பின்பற்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ளன. இது மருத்துவம், வணிகம், பொறியியல் போன்ற துறைகளில் தொழில்நுட்பக் கல்வியைத் தேடும் மாணவர்கள் அத்தகைய கல்வியை ஒப்பீட்டளவில் மலிவான வகையில் தரும் வெளிநாட்டு நிறுவனங்களை நோக்கி வெளியேற வழிவகுத்தது. தரம் குறைந்த வெளிநாட்டு கல்வி நிறுவனங்களை இங்கு கடை அமைக்க அழைப்பதால் இந்த நிலைமை மேலும் மோசமடையும்.
l தேசிய கல்விக் கொள்கை 2020, தனியார்மயமாக்கலை ஊக்குவிப்பது மட்டுமின்றி, முழுக் கல்வி முறையையும் மாற்றியமைக்கும் வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளது.
l வரலாற்றைத் திருத்தி எழுதுவதன் மூலமும், சமூக அறிவியலைக் காவிமயமாக்குவதன் மூலமும், இந்த விஷயங்கள் நிலப்பிரபுத்துவ, ஆணாதிக்க மற்றும் பழமைவாத சிந்தனைகள் மற்றும் மூடநம்பிக்கைகளில் மூழ்கடிக்கப்பட்டுள்ளன. ஜோதிடம், வேதக் கணிதம், ஒழுக்கக் கல்வி என்ற பெயரில் பாடத்திட்டங்கள் பகுத்தறிவுக்கு ஒவ்வாத, அறிவியலுக்குப் புறம்பான கருத்துக்களால் நிரப்பப்படுகின்றன.
l பாஜக-ஆர்எஸ்எஸ் அமைப்பின் மனுவாதி நிகழ்ச்சி நிரல் 2014 முதல் பல்வேறு மத்திய பல்கலைக்கழகங்களில் அனைத்து வகையான விவாதங்கள் மற்றும் கருத்து வேறுபாடுகளை குறைத்தும் நிறுத்தியும் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. கேள்வி கேட்பவர்கள் மௌனமாக்கப்படுகிறார்கள்; போராடுபவர்கள் சிறைக்கு அனுப்பப்படுகிறார்கள் அல்லது ரோஹித் வெமுலா போன்ற நிறுவன ரீதியான படுகொலைகளுக்கு பலியாக்கப்படுகிறார்கள். ஆசிரியர்கள் கடுமையாக கட்டுப்படுத்தப்படுகிறார்கள். அரசாங்கத்தின் சித்தாந்தத்தை விமர்சித்தால்
அவர்கள் ஏபிவிபி குண்டர்களிடமிருந்து வன்முறையை எதிர்கொள்கின்றனர்.
l பாஜக ஆளாத மாநிலங்களில், பாஜக ஆட்சி நியமித்த கவர்னர்கள், பல்கலைக் கழகங்களின் செயல்பாடுகளில் வெளிப்படையாகவே தலையிடுகின்றனர். சென்னை மற்றும் புதுச்சேரி பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமிக்க மறுக்கும் தமிழக ஆளுநரின் நடவடிக்கை இதற்கு சிறந்த உதாரணம் ஆகும்.
l பல்கலைக் கழக நிர்வாகங்கள் ஆசிரியர்களையும் மாணவர்களையும் ஒடுக்குவதற்கு எந்த வாய்ப்பையும் விட்டுவைக்கவில்லை. ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் (ஜே.என்.யூ), பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் (பி.எச்.யு), ஜாமியா மிலியா போன்றவை இதற்கு தெளிவான எடுத்துக்காட்டுகள்.
l கேரளாவில் இடது ஜனநாயக முன்னணி அரசு கல்வித் துறையில் பல முன்மாதிரியான கொள்கைகளை செயல்படுத்தியுள்ளது. இதன் விளைவாக தனியார் பள்ளி
களுடன் ஒப்பிடும்போது அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள் ளது. கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்க மாநில அரசுகளுடன் கூடவே கேரளாவின் இடது ஜனநாயக முன்னணி அரசும் தேசிய கல்விக் கொள்கை 2020 மற்றும் பாடத்திட்டங்களில் மாற்றங்களை செயல்படுத்த மறுத்துவிட்டது. நமது அரசமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள கூட்டாட்சித் தன்மையை மீறி, இந்த மாநிலங்களுக்கு கல்வித் தலைப்பின் கீழ் மானியம் வழங்குவதில்லை என்ற தனது நோக்கத்தை ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.
l நாட்டின் கல்வித்துறையை வீழ்ச்சியின் விளிம்புக்கு மோடி அரசு கொண்டு வந்துள் ளது. கல்வி உரிமைச் சட்டம் 2009 நடைமுறையில் அழிக்கப்பட்டு, கல்வித்துறை கார்ப்பரேட் மயமாக்கப்பட்டு, வகுப்புவாத மயமாக்கப்பட்டு, அதிகார மையப்படுத் தப்பட்டுள்ளது.
கல்வி மற்றும் பொதுக் கல்வி நிறுவனங்களை காப்பாற்றுவோம்! பாஜகவை தோற்கடிப்போம்!